கீதா ஜீவனை மிரட்டிய மறுநாளே.. சசிகலா புஷ்பா வீட்டில் பரபர தாக்குதல்.. கார் உடைப்பு.. பதற்றம்
தூத்துக்குடி: அமைச்சர் கீதா ஜீவனுக்கு மிரட்டல் விடுத்த 24 மணி நேரத்திற்குள், பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சேர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா புஷ்பா வீட்டை சேதப்படுத்திய மர்ம நபர்களை பிடிக்க, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக திமுக - பாஜக தலைவர்களிடையே வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார். அதேபோல் ரஃபேல் வாட்சிற்கான ஆதாரத்தையோ, ஊழல் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தையோ அண்ணாமலை இதுவரை வெளியிடவில்லை.

அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம்
இதனால் திமுகவினர் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாஜகவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் மேடைக்கு நாங்கள் ஏறுவோம். சூடு, சொரணை இருந்தால் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.

சசிகலா புஷ்பா மிரட்டல்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா பேசுகையில், நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, அண்ணாமலையை பற்றி பேச நாக்கு இருக்காது என்று பேசினார். அதுமட்டுமல்லாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் உழைக்கிறார். மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை என்று தெரிவித்தார்.

கண்ணாடிகள் உடைப்பு
இந்த நிலையில் இன்று காலை சசிகலா புஷ்பா நாகர்கோவிலுக்கு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். அதன்பின்னர், பிஎன்டி காலனியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு இருந்த கார் கண்ணாடி, வீட்டு கண்ணாடி, ஜன்னல் கண்ணாடிகள், சேர் மற்றும் பூந்தொட்டிகள் ஆகியவற்றை உடைத்து மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

போலீசார் விசாரணை
இதையடுத்து சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு ஏராளமான பாஜக நிர்வாகிகள் குவிந்தனர். பின்னர் சசிகலா புஷ்பா வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடி சிப்காட் போலீசார் சசிகலா புஷ்பா வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications