திமுகவின் சாதனைகளை சொல்லி ஸ்டாலின் வாக்கு சேகரிக்க முடியுமா?... முதல்வர் பழனிசாமி கேள்வி
ஒட்டபிடாரம்: திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கூறி ஸ்டாலினால் வாக்கு சேகரிக்க முடியுமா என்று முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 88 திமுக எம்.எல்.ஏக்களில் இதுவரை ஒருவர் கூட மக்கள் பிரச்சனைக்காக என்னிடம் மனு அளித்ததில்லை என்றார்.

மேலும், ஒட்டபிடாரம் ஊராட்சி தரம் உயர்த்தி, பேரூராட்சியாக அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்தார். எங்களை பற்றி குறை சொல்லியே ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை கூறி ஸ்டாலினால் வாக்கு சேகரிக்க முடியாது என்றும் கூறினார்.
கடந்த 14 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவினர், மத்திய அரசு வேலை வாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தரவில்லை என்று குற்றம்சாட்டினார்.
தங்களின் குடும்பத்தை பற்றித்தான் சிந்தித்தார்களே தவிர, மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்தார். முன்னதாக, தேர்தல் பிரச்சார யுக்தி, வழிமுறைகள் குறித்து அ.தி.மு.க ஐ.டி பிரிவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications