"ரொம்ப நல்லவர்".. கிராமத்தினர் கண்ணீர்.. 21 குண்டுகள் முழங்க.. போலீஸ்காரர் சுப்பிரமணியம் இறுதிசடங்கு
தூத்துக்குடி: குண்டுவீச்சில் சுருண்டு விழுந்து உயிரிழந்த தூத்துக்குடி போலீஸ்காரர் சுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.. "ரொம்ப நல்லவர்.. கண் முன்னாடியே மிடுக்கென நடமாடி கொண்டிருந்தவர், இப்படி பொசுக்கென கண்ணை மூடிட்டாரே" என்று சுப்பிரமணி உடலுக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
துரைமுத்து என்ற ரவுடியை தூத்துக்குடி போலீசார் தேடி கொண்டிருந்தனர்.. அவர் இரட்டை கொலை உட்பட பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்.. அவர் வல்லக்காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதனால் அவரை பிடிக்கும் பணியில் போலீசாரும் ஈடுபட்டிருந்தனர்... அப்போது போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மேலும் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.. தொடர்ந்து தேடுதல் பணி அங்கு நடந்தது.. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பியும் விரைந்து வந்தார்.

குற்றவாளியை பிடிக்க உத்தரவிட்டார்.. அதன்படியே தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு துரைமுத்து பிடிபட்டாலும், பலத்த காயங்களுடன் இருந்தார்.. ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் அவரது உயிரும் பிரிந்தது..

சுப்பிரமணி இறப்பு காவல்துறையினருக்கு பெரும் அதிர்ரச்சியை ஏற்படுத்தியது.. அவரது சடலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், சுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. முன்னதாக, அவரது சொந்த ஊரான பண்டாரவிளையில் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உட்பட காவல் துறை உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டு சுப்பிரமணியன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்... சுப்பிரமணியன் உடலுக்கு தென்மண்டல ஐஜி முருகன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் வீரவணக்கம் செலுத்தினர். அதேபோல் பொதுமக்கள், உறவினர்கள், என ஒட்டுமொத்த கிராமமும் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியது.

உயிரிழந்த சுப்பிரமணியன் கடந்த 2017-ல்தான் போலீஸ் வேலைக்கே வந்துள்ளார்.. தன்னுடைய முதல் வேலையை ஆழ்வார் திருநகரி ஸ்டேஷனில்தான் தொடங்கியுள்ளார். வேலையில் சேர்ந்து 3 வருஷங்கள் ஆன நிலையில், சில தினங்களுக்கு முன்புதான், தனிப்படை பிரிவில் போலீசாக பணிமாற்றம் செய்யப்பட்டாராம்.

இவர் ரொம்ப நேர்மையானவர் என்கிறார்கள் கிராம மக்கள்.. பணிக்கு தவறாமல் வருபவரும்கூட... அக்கம்பக்கத்தினர் அனைவரிடமும் வெகு இயல்பாக பேசுவாராம்.. "கண் முன்னாடியே மிடுக்கென நடமாடி கொண்டிருந்தவர், இப்படி பொசுக்கென கண்ணை மூடிட்டாரே" என்று கண்ணீர் மல்க கிராம மக்கள் கூறுகிறார்கள்!
-
குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன் -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications