வேலூர் சிறையில் 103 பாஜகவினர் விடுதலை! ஆரத்தியுடன் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து வரவேற்பு..சர்ச்சை
வேலூர்: வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 103 பாஜகவினர் இன்று ஜாமினில் விடுதலையாகினர். இந்நிலையில் சிறை வாசலில் அவர்களுக்கு பாஜகவினர் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ‛ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் நடைபெறும் பணிகளில் முறைகேடு புகார்கள் எழுந்துள்னள.
இதேபோல் வேலூர் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

பாஜகவினர் போராட்டம்
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு பாஜகவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 13ம் தேதி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடி சென்றனர். போலீசார் தடுப்புகள் வைத்து தடுத்தனர். ஆனால் அவர்கள் தடுப்புகளை மீறி மாநகராட்சி அலுவலகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

103 பேர் மீது வழக்கு
இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, மாநகராட்சி அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது புகார் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் பாஜகவை சேர்ந்த 103 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர்கள் கூறினர். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

ஆரத்தி எடுத்து வரவேற்பு
இதையடுத்து பாஜகவினர் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரேவற்றனர். ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டவர்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். பாஜகவின் மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் கார்த்தியாயினி உடனிருந்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.
-
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications