நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது நடவடிக்கை! எனக்கு ஒரு போன் பண்ணுங்க! -அமைச்சர் துரைமுருகன்
வேலூர்: நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினாலோ, அசுத்தம் செய்தாலோ தனக்கு ஒரு போன் அடித்தால் போதும் என அவர் பேசியுள்ளார்.
நீர்நிலைகளை மாசுபடுத்தினால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
தனது சொந்த அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் தளராமல் கட்சிப்பணி, ஆட்சிப்பணி என பரபரப்பாக இயங்கி வருகிறார் துரைமுருகன். அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நேற்றிரவு பேசிய அவர், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். நீர் நிலைகளை யார் மசுபடுத்தினாலும் அதை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை
சென்னையிலிருந்து வேலூருக்கு தாம் ரயிலில் வந்துகொண்டிருந்த போது மாவட்ட எல்லையில் தனியார் நிறுவனத்தின் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு வைத்திருந்ததை பார்த்ததாகவும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை பார்த்தால் தமக்கு ஒரு போன் அடித்தால் போதும் என்ற உறுதியை அமைச்சர் துரைமுருகன் அளித்துள்ளார்.

நீர் நிலைகள்
நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள அரசும் அதற்கான பணிகளை செய்து வருகிறது. நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீர் நிலைகளை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நீர் நிலைகளை மாசுபடுத்துபவர்கள் பற்றி தனக்கு நேரடியாக போனில் புகார் அளிக்கலாம் என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல்
அண்ணன் மகள் தற்கொலையால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்வாரோ கலந்து கொள்ளமாட்டோரோ என கட்சியினர் குழம்பிய நிலையில், எந்த மாறுதலும் செய்ய வேண்டாம் எனக் கூறி திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் திட்டமிட்டபடி அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications