நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது நடவடிக்கை! எனக்கு ஒரு போன் பண்ணுங்க! -அமைச்சர் துரைமுருகன்
வேலூர்: நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினாலோ, அசுத்தம் செய்தாலோ தனக்கு ஒரு போன் அடித்தால் போதும் என அவர் பேசியுள்ளார்.
நீர்நிலைகளை மாசுபடுத்தினால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
தனது சொந்த அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் தளராமல் கட்சிப்பணி, ஆட்சிப்பணி என பரபரப்பாக இயங்கி வருகிறார் துரைமுருகன். அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நேற்றிரவு பேசிய அவர், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். நீர் நிலைகளை யார் மசுபடுத்தினாலும் அதை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை
சென்னையிலிருந்து வேலூருக்கு தாம் ரயிலில் வந்துகொண்டிருந்த போது மாவட்ட எல்லையில் தனியார் நிறுவனத்தின் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு வைத்திருந்ததை பார்த்ததாகவும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை பார்த்தால் தமக்கு ஒரு போன் அடித்தால் போதும் என்ற உறுதியை அமைச்சர் துரைமுருகன் அளித்துள்ளார்.

நீர் நிலைகள்
நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள அரசும் அதற்கான பணிகளை செய்து வருகிறது. நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீர் நிலைகளை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நீர் நிலைகளை மாசுபடுத்துபவர்கள் பற்றி தனக்கு நேரடியாக போனில் புகார் அளிக்கலாம் என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல்
அண்ணன் மகள் தற்கொலையால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்வாரோ கலந்து கொள்ளமாட்டோரோ என கட்சியினர் குழம்பிய நிலையில், எந்த மாறுதலும் செய்ய வேண்டாம் எனக் கூறி திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் திட்டமிட்டபடி அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications