Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருத்தடை செய்தும் கர்ப்பம்.. அலட்சியமாக பதிலளித்த அரசு மருத்துவர்! ரவுண்ட் கட்டிய உறவினர்கள்! பரபர

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்து கொண்ட பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து, அரசு மகப்பேறு மருத்துவரிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, காதர்பேட்டை நியூ டெல்லி பகுதியை சேர்ந்தவர் ரியான் இவரது மனைவி ரேஷ்மாவுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் ரேஷ்மா இரண்டு குழந்தைகள் போதும் என்று கூறி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கருத்தடை (குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை) செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ரேஷ்மாவிற்கு வயிற்று வலி வந்துள்ளது.

tirupattur Sterilization Government Hospital

உடனடியாக அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வயிற்று வலி குறையாததால் அந்தப் பெண்ணிற்கு ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்து குழந்தை அபார்ஷன் ஆகி விட்டதால் வயிற்று வலி வந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணுக்கு கருத்தடை செய்த மகப்பேறு மருத்துவர் தமிழ்செல்வியிடம் கேட்டபோது மருத்துவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த நகர காவல் துறையினர் மற்றும் மருத்துவர்கள் வந்து பெண்ணின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், இரண்டு குழந்தைகள் போதும் என்று கருத்தடை செய்த பெண்ணிற்கு மீண்டும் எப்படி கருவுற்றார் , அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை கடவுளாக நம்பி சிகிச்சை பெற வந்தால் இதுபோன்று மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பது மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், இது போன்று அலட்சியமாக செயல்படும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+