For Daily Alerts
Just In
தமிழ் நாடகக்கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 94வது நினைவு நாள்... புதுவையில் மரியாதை- வீடியோ
புதுச்சேரி: தமிழ் நாடகக் கலையின் தந்தை என்று அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 94-வது நினைவு நாள் விழா புதுவையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி அரசு, கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நினைவு நாள் ஊர்வலத்தில் நடிகை குட்டிபத்மினி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாடகக் கலைஞார்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாகச் சென்று, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் பெரும்பாலானவை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Sankaradas Swamigal, the doyen of Tamil theatre, was remembered here on Friday by politicians, film personalities and artistes. Puducherry Manila Kalai Ilakkiya Peru Mandram organised a procession from Mahatma Gandhi Road.
Story first published: Monday, November 14, 2016, 16:50 [IST]