சந்தன வீரப்பன் 12வது நினைவு தினம் : மனைவி, மகள்கள் அஞ்சலி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: வீரப்பனின் 12வது நினைவு தினத்தன்று அவரது நினைவிடத்தில் பேனர் வைக்கவும், அன்னதானம் வழங்கவும் போலீஸ் தடை விதித்திருந்தனர்.
கடந்த, 2004 அக்டோபர்18ம் தேதி தர்மபுரியை அடுத்த, பாப்பாரப்பட்டியில், தமிழக அதிரடிப்படையினர் சந்தன கடத்தல் வீரப்பனை, சுட்டுக்கொன்றனர். அவரது உடல், மேட்டூர் அடுத்த மூலக்காட்டில் பொதுப்பணித்துறை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும், வீரப்பன் சமாதியில் மனைவி முத்துலட்சுமி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவர். வீரப்பனின், 12வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் ஆதரவாளர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications