விழுப்புரமே விக்கித்தது.. சங்கீதா செஞ்ச வேலைய பாத்தீங்களா.. அதுவும் ஆபீசில்.. கரெக்ட்டா வந்த ஆபீசர்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சங்கீதா செய்த காரியத்தை பார்த்து விழுப்புரமே வாயடைத்து போயுள்ளது.. இத்தனைக்கும் சங்கீதா ஒரு அரசு அதிகாரி ஆவார்.

விழுப்புரம் மாவட்டம் அரியலூர்திருக்கை பகுதியை சேர்ந்தவர் அன்னம்மாள்.. 70 வயதாகிறது.. இவருடைய கணவர் அருளாந்தின் அப்பா மாணிக்கம், அதாவது மாமனார், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்..

அருளாந்தின் அண்ணன் சவரிமுத்து 25 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது இறப்பினை பதிவு செய்ய வேண்டும் என்ற விவரம்கூட அன்னம்மாளுக்கு தெரியவில்லை.. அதனால், அப்படியே விட்டுவிட்டார்.

Did VAO Sangeetha take bribe of 1000 rupees and What happened in Villupuram District

சங்கீதா: இப்போது, பூர்வீக சொத்து தொடர்பாக அவர்கள் 2 பேரின் இறப்பு சான்றிதழும் அன்னம்மாளுக்கு தேவைப்படுகிறது.. அதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர்திருக்கை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சங்கீதா என்பவரை அணுகினார்.. விழுப்புரத்தை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவிதான் சங்கீதா.. 48 வயதாகிறது..

மாணிக்கம், சவரிமுத்து ஆகியோரின் இறப்பு விவரத்தை ஆன்லைனில் பதிவு செய்து வழங்குவதற்காக, ஒவ்வொரு மனுவுக்கும் ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என்று அன்னம்மாளிடம் சங்கீதா கேட்டதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அன்னம்மாள், தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தன்னிடம் அவ்வளவு காசு இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

அத்துடன், எப்படியாவது இறப்பு சான்றிதழ் தரும்படி சங்கீதாவிடம் கெஞ்சியுள்ளார்.. ஆனால், சங்கீதாவோ, எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை.. பணம் கொடுத்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்து, இறப்பு சான்றிதழ் தர முடியும் என்று கறாராக சொல்லிவிட்டார்.. அதுமட்டுமல்ல, அந்த லஞ்ச பணத்தை, தான் வேலை பார்க்கும் ஆபீசுக்கே வந்து தன்னிடம் கொடுக்கும்படியும் கண்டிஷன் போட்டுள்ளார்.

கண்காணிப்பு புகார்: இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார் அன்னம்மாள். இதேசமயம், சங்கீதாவுக்கு லஞ்சம் தரவும் விருப்பமில்லை. அதனால், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் தந்துவிட்டார்..

இதையடுத்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய ரூ.1,000 பணத்தை அன்னம்மாளிடம் தந்து, விஏஓவிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். மறுநாளே அன்னம்மாள், சங்கீதாவிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்தார்.. விஏஓ சங்கீதாவும் அதனை பெற்றுக்கொண்டார்.. அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக விஏஓ சங்கீதாவை பிடித்து கைது செய்தனர்.

Did VAO Sangeetha take bribe of 1000 rupees and What happened in Villupuram District

விழுப்புரம் போலீஸ்: அவரை விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.. வறுமையில் வாடும் அன்னம்மாளிடமே 1000 ரூபாய் வாங்கிய சங்கீதா, இதற்கு முன்பு எத்தனை பேரிடம் லஞ்சம் பெற்றிருக்கிறார் என்று தெரியவில்லை.. விசாரணை முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டால்தான், உண்மைகள் வெளியே வரும்.

சில மாதங்களுக்கு முன்பு, வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது.. அந்த வீடியோவிலும் சங்கீதா லஞ்சம் வாங்குவது பதிவாகியிருந்தது.. அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஏரியில் மண் எடுப்பதற்கு ரூ.5,000 லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.. இப்போது சங்கீதா கைதாகி உள்ள நிலையில், இந்த வீடியோவும் வைரலாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+