ஆஹா.. ஒரே ஒரு மெசேஜ்.. 50 பில்லியன் டாலரோடு உலகில் 25வது பணக்காரராக மாறிய நபர்! முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பதற்கு ஏற்ப செல்போனுக்கு வந்த ஒரு மெசேஜ் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் 50 பில்லியன் அமெரிக்க டாலருடன் உலகின் மிகப்பெரிய 25வது பணக்காரராக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டும் என விரும்புகின்றனர். இது அனைவருக்கும் சாத்தியம் ஆகுமா? என்றால் சற்று சிரமமான விஷயம் தான்.

இருப்பினும் தொடர்ச்சியாக திட்டமிட்டு உழைத்தால் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக மாறலாம் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அமெரிக்காவில் ஒருவர் உழைக்ககாமல் ஒரே ஒரு மெசேஜ் மூலம் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறிய சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

செல்போனுக்கு வந்த மெசேஜ்

செல்போனுக்கு வந்த மெசேஜ்

அமெரிக்காவில் உள்ள லூசியானா பகுதியில் வசித்த வருபவர் டேரன். லூசியான பொது பாதுகாப்பு துறையில் சட்ட அமலாக்க அதிகாரியாக பணியாற்றி இருந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் டேரனின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் வங்கி கணக்கில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உலகின் 25வது பணக்காரராக...

உலகின் 25வது பணக்காரராக...

இதனை பார்த்து அவர் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி நிலைக்கு சென்றார். தனது வாழ்நாளில் இத்தகைய டாலர் பணத்தை அவர் ஒருநாளும் பெற மாட்டார் என்பதால் அவர் அதிர்ச்சியில் உறைந்தார். இதன்மூலம் விர்ஜின் குழுமத்தின் உரிமையாளரான ரிச்சர்ட் பிரான்சனை விட டேரன் 10 மடங்கு பணம் வைத்துள்ள நபராக மாறினார். அதோடு உலகில் 25வது பணக்காரர் என்ற நிலைக்கு டேரன் சென்றார்.

வங்கிக்கு தகவல்

வங்கிக்கு தகவல்

இருப்பினும் அவர் அந்த டாலரை பயன்படுத்த விரும்பவில்லை. இதனால் தனது வங்கி கணக்குக்கு எப்படி இவ்வளவு டாலர் வந்தது என்பதை அவர் யோசித்தார். வங்கியில் ஏதாவது தவறுதலாக டாலர் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என அவர் எண்ணினார். இதனால் அவர் வங்கியை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறினார்.

கைவிட்டு போன பணம்

கைவிட்டு போன பணம்

வங்கி அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அப்போது தவறுதலாக டேரனின் வங்கி கணக்குக்கு 50 பில்லியன் டாலர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்கை 3 நாள் முடக்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வங்கி கணக்கில் இருந்த 50 பில்லியன் டாலரை திரும்ப எடுத்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+