280 எழுத்துக்கள் போதாது.. பஞ்சாயத்தை துவக்கி வைத்த எலான் மஸ்க்! திணறிப் போன ட்விட்டர்! பின்னணி என்ன?
வாஷிங்டன் : ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ள நிலையில், ட்விட்டரில் கருத்து பதிவு செய்ய தனக்கு 280 எழுத்துக்கள் போதாது என கூறியுள்ளார்.
Recommended Video
தினந்தோறும் ஹாட் டாப்பிக்காக வலம் வரும் எலான் மஸ்க் ட்விட்டருடன் மோதல் போக்கை கொண்டு வருகிறார்.
ட்விட்டர் பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை எனவும், தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

எலான் மஸ்க் அதிரடி
அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார் . சுமார் 73.5 மில்லியன் ட்விட்டர் பங்குகளை வாங்கியதாக தெரிவித்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையால் எலான் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மாறியுள்ளார். ஆனாலும் விடாமல் ட்விட்டரை முழுமையாக கைப்பற்றப்போவதாகவும் கூறி ஆஃபரையும் வழங்கினார். ட்விட்டரை $43 பில்லியனுக்கு வாங்குவதாகவும் கூறினார்.

ட்விட்டர் பதிவு
இந்நிலையில் அடுத்த அதிரடியாக எலான் மஸ்க் ட்விட்டரில் ட்விட் செய்ய தனக்கு 280 எழுத்துக்கள் போதாது என கூறியுள்ளார். ட்விட்டர் தற்போது 280 எழுத்துகளில் ட்விட் செய்யவே அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் நவம்பர் 2017ல் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அனைத்து பயனர்களுக்கும் 280 எழுத்துகளை வைத்து பதிவிட அறிமுகப்படுத்தியது. முன்னதாக 140 எழுத்துகளில் மட்டுமே பதிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கை போதாது
ட்விட்டரில் தன்னை பின் தொடரும் நபருக்கு பதில் அளித்த எலான் மஸ்க் " ட்விட்டர் நீண்ட வடிவ ட்வீட்களுக்கு தாமதமாகிவிட்டது!" என்றார். முன்னதாக ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா என கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு 74.4 சதவீதம் பேர் எடிட் பட்டன் வேண்டும் என்றும், 25.6 சதவீதம் பேர் வேண்டாம் என்றும் வாக்களித்திருந்தனர். இந்த கருத்துக்கணிப்பை பகிர்ந்த ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் இந்த கருத்துகணிப்புக்கு கவனமாக வாக்களியுங்கள். இதன் விளைவு மிக முக்கியம் என கூறினார்.

சுதந்திரமான பேச்சு தளம்
"உலகளவில் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக ட்விட்டர் இருக்கும் என நம்பிக்கையின் அடிப்படையில் தான் அதில் முதலீடு செய்தேன். ஆனால், அதன் தற்போதைய வடிவத்தில் பேச்சு சுதந்திரத்தை முழுமையாக வழங்கும் நோக்கம் நிறைவேறாது என்பதை நான் இப்போது உணர்கிறேன். ட்விட்டரை ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும்" என்றும் எலான் மஸ்க் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications