கொரோனா தடுப்பூசி போட்ட ஜோ பிடன்... அடுத்த வாரம் கமலா ஹாரீஸ்.. டிரம்ப் மட்டும் தொடர்ந்து மவுனம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பிடன் (ஜோ பைடன்) இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலலா ஹாரீஸ் குடும்பத்தினருடன் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி போட உள்ளார்.
உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் மிக மோசமான அழிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 1,84,73,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,26,772 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.

உலகின் பிற நாடுகளைப் போல அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்.
இந்த நிலையில் நேரலையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார் புதிய அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பிடன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக நேரலையில் செலுத்திக் கொண்டதாக ஜோ பிடன் கூறினார்.
மேலும் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரீஸ் குடும்பத்தினருடன் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள இருக்கிறார். ஆனால் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் இது பற்றி வாயே திறக்காமல் உள்ளார்.
ஏற்கனவே பிரேசில் அதிபர், கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் ஃபைசர் நிறுவனம் பொறுப்பாகாது என பீதி ஏற்படுத்தி இருந்தார். டொனால்ட் டிரம்ப்போ, தடுப்பூசி போடுவது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications