ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்!
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 4வது வாரத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், இந்த தாக்குதல் அடுத்த 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த போர் நிறுத்த காலத்தில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

டிரம்ப் சொன்னது என்ன?
டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது, "ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, அதாவது ஏப்ரல் 6, திங்கட்கிழமை இரவு 8 மணி வரை ஒத்திவைப்பதாக இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போலிச் செய்தி ஊடகங்களும் பிறரும் இதற்கு மாறாகத் தவறான தகவல்களைப் பரப்பி வந்தபோதிலும், பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக அமெரிக்கா சார்பில் 15 அம்ச அமைதி திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு ஈரான் இதுவரை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இருந்த போதிலும் அமெரிக்கா தாக்குதலை நிறுத்துவதாக தெரிவித்திருக்கிறது.
15 அம்ச கோரிக்கை
ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பதையும், சோதிப்பதையும் நிறுத்த வேண்டும்
ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கும் நிதி மற்றும் ஆயுத உதவிகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தனது ராணுவ ஆலோசகர்களையும், ஆதரவுப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
ஹார்முஸ் நீரிணையை உலக வர்த்தகத்திற்காக திறக்க வேண்டும்
ஹார்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட கூடாது
ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாட்டுப் பிரஜைகளை விடுவிக்க வேண்டும்.
வேலைக்கு ஆகாத விஷயம்
இப்படி 15 நிபந்தனைகளை அமெரிக்கா அடுக்கியிருக்கிறது. இது எல்லாம் அப்படியே ஈரான் பின்பற்றினால், நிச்சயம் அது பலவீனமாகும். எனவே, இந்த விஷயத்தில் ஈரான் யோசித்து வருகிறது. இதனை ஏற்றால் அதன் மீதுள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா நீக்கும். ஈரான் மீண்டும் உலக நாடுகளுக்குச் சுதந்திரமாக எண்ணெய் விற்க அனுமதிக்கப்படும் என்று டிரம்ப் கூறுகிறார்.
போரின் போக்கு
ஆனால், இதெல்லம் சும்மா கதை. ஈரான் மீதான பொருக்கு காரணம், டாலரின் ஆதிக்கத்தை தக்க வைக்க வேண்டும் என்பதுதான். எனவே, ஈரான் பின்பற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து, அமெரிக்கா போரை நீடிக்க பார்க்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்











Click it and Unblock the Notifications