650 மில்லியன் டாலர் மதிப்பிலான 280 அதிநவீன விமான ஏவுகணைகள்... செளதி அரேபியாவுக்கு வழங்கும் யு.எஸ்.
வாஷிங்டன்: ஏமன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தும் ஆளில்லா விமான தாக்குதல்களை (ட்ரோன் தாக்குதல்களை) எதிர்கொள்ள செளதி அரேபியாவுக்கு 650 மில்லியன் டாலர் மதிப்பினா 280 அதிநவீன விமான ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Recommended Video
ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து டிரோன்கள் தாக்குதல்களை செளதி அரேபியா எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய டிரோன்களை எதிர்கொள்ள ஏற்கனவே செளதி அரேபியாவுக்கு அமெரிக்கா ஏவுகணைகளை வழங்கி உள்ளது.

செளதிக்கு நவீன ஏவுகணைகள்
இருப்பினும் தற்போது இத்தகைய தாக்குதல்களை முறியடிக்க AIM-120C என்கிற அதிநவீன 280 வான்வழி விமான ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க உள்ளது. எல்லை கடந்து செளதி அரேபியா எதிர்கொள்ளும் தாக்குதல்களை முறியடிக்க இது உதவும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை.

மிகப் பெரிய ஆயுத உதவி
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்னர் செளதி அரேபியாவுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய அளவிலான ஆயுத உதவி இதுவாகும். ஏமனுனான செளதி அரேபியாவின் மோதலை முடிவுக்கு கொண்டு வரவும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ளவும் செளதி அரேபியாவுக்கு இந்த ஏவுகணைகள் உதவும் என்கிறது அமெரிக்கா.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள்
கடந்த மாதம் செளதி அரேபியாவின் ஜிசான் நகரில் அமைந்துள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் ஏமன் நாட்டு பகுதியில் இருந்து கிளர்ச்சியாளர்களால் எல்லை தாண்டிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் செளதி அரேபியாவை சேர்ந்த 6 பேரும் வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் விமான நிலையமும் கடும் சேதமடைந்தது.

செளதி கூட்டுப் படை
தற்போது ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதியின் அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஏமனின் மரிப் நகரின் தெற்கே அபியா பகுதியில் செளதி தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதல்களில் 160 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த மரிப் நகருக்கான யுத்தத்தில் இதுவரை 1000க்கும் அதிகமான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications