ஆடி அமாவாசை.. பவானி கூடுதுறையில் தர்ப்பணம் அளித்து புனித நீராட அனுமதி உண்டா?
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் தர்ப்பணம் தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் திதி, தர்ப்பணம் அளித்து புனித நீராட அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆடி அமாவாசையான வருகிற 28ஆம் தேதி பவானி கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆற்றுடன், கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் இங்கு கூடுவதாக ஐதீகம் உள்ளது.
இதனால் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டால் குடும்பம் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பவானி கூடுதுறையில் தர்ப்பணம்
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி மாத பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர். மேலும் நாக தோஷம், திருமண தோஷம் உள்பட பல்வேறு தோஷங்கள் நீங்கவும் பக்தர்கள் பரிகார வழிபாடும் செய்வார்கள்.

ஆடி அமாவாசை
இந்த நிலையில் வருகிற 28ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. இதை முன்னிட்டு பவானி கூடுதுறைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து திதி, தர்ப்பணம் மற்றும் பரிகார பூஜை செய்வதற்காக வருவார்கள். ஆனால் தற்போது பவானியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கலாமா? திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்ய அனுமதிக்கலாமா? என்பது குறித்து அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பவானி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

பவானி கூடுதுறையில் ஏற்பாடுகள்
கூட்டத்துக்கு பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மருத்துவத்துறை மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகத்தை சேர்ந்த துறை அதிகாரிகள் மற்றும் சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், வருகிற 28ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்தை முறையாக சீரமைக்க வேண்டும். தீயணைப்பு துறை சார்பில் நீச்சல் வீரர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களோடு இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Recommended Video

காவிரி ஆற்றில் வெள்ளம்
மருத்துவத்துறையினர் 2 டாக்டர்கள் மற்றும் செவிலியர் அடங்கிய சுகாதார குழுவினர் மற்றும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் இருக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனுக்குடன் கூடுதுறையில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். காவிரி ஆற்றில் வெள்ளம் குறித்த தகவல்களை பக்தர்களுக்கு நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்ற பல முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

தர்ப்பணம் தர தடையில்லை
மேலும் ஆடி அமாவாசையான வருகிற 28ஆம் தேதி பவானி கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கூடுதுறை பகுதியில் பக்தர்கள் திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித நீராட அனுமதி கிடைக்குமா?
கூடுதுறை தவிர ஆற்றங்கரையில் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் அங்குள்ள நீர்நிலைகளில் பாதுகாப்பு கருதி பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்தை பொறுத்து காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications