Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

24 மணி நேரம்தான் டைம்.. ஆர்த்திக்கு கெடு விதித்த ரவி மோகன்.. முடிவுக்கு வந்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவிமோகன் தன்னை பற்றி தன்னுடைய மனைவி ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா சுஜாதா விஜயகுமார் இருவரும் அவதூறு பரப்பி வருவதாகவும் அவர்கள் சோசியல் மீடியா பக்கங்களில் தன்னைப் பற்றி வெளியிட்ட அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என்று லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவித்தார். அதற்கு ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவு என்றும் கூறியிருந்தார்.

Ravi Mohan Jayam Ravi

விவாகரத்து பிரச்சனை

பிறகு ரவி மோகன் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 2009 ஆம் ஆண்டு செய்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்த்தியை எதற்காக பிரிகிறேன் என்று ரவி மோகன் தரப்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதேசமயம் ஆர்த்தி தரப்பிலும் பதில் கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ரவி மோகன் பற்றி பல குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார்.

ரவி மோகன் அறிக்கை

ஆனால் தன் மீது வைத்த குற்றசாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என்று ரவி மோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். அதேபோல ரவி மோகன் தன்னை சினிமா தயாரிக்க சொன்னதால் தான் நான் சினிமா தயாரிக்க தொடங்கினேன், அதனால் எனக்கு 100 கோடி கடன் இருக்கிறது என்று சுஜாதா விஜயகுமாரும் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

ஆர்த்தி அறிக்கை

இப்படியான நிலையில் அந்த வாரத்தில் ஆர்த்தி மற்றும் ரவி மோகனின் விவாகரத்து விசாரணை வந்தது. அப்போது ஆர்த்தி தரப்பில் 40 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ரவி மோகன் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பதிவுகள் நீக்கம்

இந்த மனு விசாரணையின் போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் அவதூறு கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இனி அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டு அறிக்கைகளை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி ரவி மோகன் தனது சமூக வலைதள பக்கங்களில் தான் போட்ட போஸ்ட்களை நீக்கி இருந்தார். ஆனால் ஆர்த்தி நீக்காமல் இருந்திருக்கிறார்.

லீகல் நோட்டீஸ்

இந்த நிலையில் ரவி மோகன் ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், "தன்னை பற்றி அனைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவதூறு கருத்துக்களை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்றும் நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது" அந்த நோட்டீசை ரவி மோகன் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி மற்றும் சுஜாதா இருவரும் ரவி மோகன் பற்றிய அறிக்கையை டெலிட் செய்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+