கொடைக்கானலில் ஹனிமூன்..!!தன்னை வெறுப்பவர்களுக்கு பாக்கியலட்சுமி ராதிகா கொடுத்த பதிலடி..!!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் வெறுப்பவர்களுக்கு தற்போது பதில் கொடுத்துள்ளார்.
சீரியலில் இவருக்கும் இவர் கோபிக்கும் திருமணம் நடக்குமா? இல்லையா என்று குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.
கொடைக்கானலுக்கு சென்ற ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கோபி ராதிகாவுக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சீரியலில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் தான் தற்போது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது,

மீண்டும் சங்கமம்
பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இரண்டும் சங்கமிக்கும் மகா சங்கமம் தற்போது நடைபெற இருக்கிறது. இது நான்காவது முறையாக நடக்கும் சங்கமமாக இருக்கிறது. இந்த முறை இவர்களுடைய சங்கமம் கொடைக்கானலில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சீரியல்களிலும் தற்போது கதைகளும் விறுவிறுப்பாக இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் தன்னுடைய மாமியாரிடம் விட்ட சவாலை ஜெயித்து காட்டுவாரா என்று ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் திருமணம் நடைபெறுமா பெறாதா என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

நெகட்டிவ் கருத்துக்கள்
தற்போது இரண்டு சீரியல்களும் மகா சங்கமத்தில் சேர்ந்த நேரத்தில் ராதிகாவின் கழுத்தில் தாலியும் நெத்தியில் குங்குமமும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்போ ராதிகாவிற்கு திருமணம் நடைபெற்று விட்டது என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ராதிகாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.என்னதான் காதலித்து இருந்தாலும் தான் காதலித்தவர் தன்னுடைய தோழியின் கணவர் என்பது தெரிந்தும் இந்த ராதிகா இப்படி மாறிவிட்டாரே என்று இவரை பற்றி பலர் நெகட்டிவ் கருத்துக்கள் பரப்பு வருகிறார்கள்.

ராதிகாவின் பதிலடி
தன்னைப் பற்றி நெகட்டிவ் கருத்துக்களை பரப்புபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வெறுப்பு ஒரு பெரிய சுமை& கெட்ட கர்மா. வெறுக்கத்தக்க வார்த்தைகள் இன்னும் மோசமானவை. மாறாக அன்பையும் இரக்கத்தையும் பரப்புங்கள்" என்று பதிவிட்டு தன்னுடைய லேட்டஸ்ட் ஸ்டைலான புகைப்படங்களை போஸ்ட் செய்திருக்கிறார். இவர் மீது கோபம் இருந்தாலும் இந்த புகைப்படத்தை பார்த்தாலே கோபம் எல்லாம் பறந்து விடும் என்று ரேஷ்மாவின் ரசிகர்கள் கமெண்ட்களில் ஐஸ் வைத்து வருகிறார்கள்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications