வெண்பாவுக்கு எதிராக உண்மைகளை கூறிய துர்கா.. மொத்த உண்மைகளும் அவிழ்ந்த தருணம்... சூப்பரான முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் அனைத்து வில்லத்தனங்களும் வெட்ட வெளிச்சமாக பாரதி மற்றும் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.
வெண்பா பற்றிய மொத்த உண்மைகளும் பாரதிக்கு தெரிந்ததும் கடைசியில் பாரதி வெண்பாவிற்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகிக்காக மாற்றப்பட்ட சன் டிவி சீரியல் கதை.. சீரியலிலும் கர்ப்பம்! எதிர்பார்க்காத மாற்றங்கள்
கண்ணம்மாவின் திடீர் சந்தேகம்
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று எபிசோட்டின் ஆரம்பத்தில் பாரதிக்கு குழந்தை பிறக்காது என வெண்பா சொல்லிக் கொண்டிருக்க, சௌந்தர்யா இதுல தலையிட உனக்கு எந்த உரிமையும் கிடையாது. கண்ணம்மா வா நம்ம வீட்டுக்கு போகலாம் என சொல்ல, இருங்க அத்தை, ஆரம்பத்தில் உங்கள் மகன் முகம் பிரகாசமாக இருந்துச்சு, ஆனால் இப்போ வெண்பா பேச பேச சுருங்கி போச்சு. வீட்டுக்கு போனதும் திரும்பவும் யோசிச்சு லாஜிக் என்று ஏதாவது பேசினாலும் பேசுவார். எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசி விடலாம் உங்கள் மகன் வாயாலயே என்னை வா என்று கூப்பிடவில்லையே என்று கூறுகிறார்.
வெண்பாவின் கேள்வி
இதைக் கேட்ட பாரதி நான் எதுவும் பேச மாட்டேன் வீட்டுக்கு போகலாம் என சொல்ல, வேண்டாம் கொஞ்சம் இருங்கள் உங்க உயிர்த்தோழி வெண்பா கேட்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லையே, இன்னும் பேசட்டும் ஏதாவது லாஜிக்கா கேள்வி கேட்பார். அதற்கும் பதில் சொல்லிவிட்டு நீங்கள் என்னை கூட்டிக் கொண்டு போங்க என்று கண்ணம்மா சொல்கிறார். இதனால் மகிழ்ச்சியான வெண்பா நான் பேசுவதில் லாஜிக் இருக்கிறது என்பது கண்ணம்மாவுக்கு கூட தெரிகிறது. உனக்கு தெரியலையா பாரதி? ஒருத்தருக்கு குழந்தையை பிறக்கவே தகுதி இல்லை என்று ரிசல்ட் வந்த பிறகு எப்படி டிஎன்ஏ டெஸ்ட் மேட்ச் ஆகும் என்று கேட்டுக் கொண்டு, நான் கேட்பதில் ஏதாவது தப்பு இருந்தால் இங்கே இருக்கிறவங்க ஒருத்தங்க சொல்லுங்க என்று டாக்டர் மற்றும் நர்ஸ் அனைவரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
செல்வம் சொன்ன உண்மை
அப்போது செல்வம் நான் சொல்லட்டுமா? என்று என்ட்ரி கொடுக்கிறார். செல்வத்தை பார்த்ததும் வெண்பா அதிர்ச்சி அடைகிறார். அடுத்து செல்வம் பாரதியிடம் மன்னிப்பு கேட்டு அன்னைக்கு வெண்பா இடம் பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சாம்பிள் மாற்றி வைத்தது நான்தான். நான் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் நீங்கள் உங்கள் மனைவியை சந்தேகப்பட்டிருக்க மாட்டீர்கள். எனக்கு நான் தப்பு செய்ததால் தான் இந்த நிலைமை ஆகிவிட்டது. இப்பவும் உண்மையை சொல்லவில்லை என்றால் என்னுடைய குழந்தைகளும், எனக்கும் இன்னும் பெரிய பிரச்சனைகள் தான் வரும் என்று அழுதபடியே உண்மைகளை சொல்ல, இதுவெல்லாம் பொய் அவன் சொன்னதை நம்பாதே பாரதி, உன்னை இப்படி எல்லாம் சொல்ல பேச சொன்னது யார்? எவ்வளவு பணம் கொடுத்தாங்க? இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா? என வெண்பா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அவிழ்ந்த மொத்த உண்மைகள்
அப்போது ஆதாரம் நான் இருக்கேன் என துர்கா என்ட்ரி கொடுக்கிறார். அதன் பிறகு துர்கா வெண்பா தன்னிடம் வந்து பாரதிக்கு கண்ணம்மா துரோகம் செய்துவிட்டார் அதனால் அவளை கொலை செய்ய சொன்னான் என்று சொல்லி பணத்தை கொடுத்து தன்னை கூலிப்படையாக அனுப்பிய விஷயத்தை கூறுகிறார். இதை கேட்ட பாரதி அதிர்ச்சியாகி நான் அப்படி செய்யவில்லை என்று சொல்ல, ஆமாம் பிறகு தான் எனக்கு தெரிந்தது. நீங்கள் சொல்லவில்லை உங்கள் பெயரை வெண்பா தான் பயன்படுத்தி இருக்கிறாள் என்று, பிறகு கண்ணம்மாவை கொல்ல வந்து கண்ணம்மாவின் மீது எந்த தப்பும் இல்லை என தெரிந்து கொண்டு கண்ணம்மாவுக்கு காவலாளியாக மாறினேன். எத்தனையோ முறை கண்ணம்மாவை வெண்பாவிடமிருந்து காப்பாற்றி இருக்கிறேன். அது மட்டும் அல்லாமல் பிரசவ நேரத்திலும் கண்ணமாவை விஷ ஊசி போட்டு கொல்ல செய்ய முயற்சி செய்தாள். அப்போதும் நான் தான் தடுத்து காப்பாற்றினேன் என்று கூறுகிறார்.
வெண்பாவின் அடுத்த நடிப்பு
அதுமட்டுமில்லாமல் வெண்பாவின் சித்தப்பா அதிகமாக மது குடித்து இறந்து விட்டதாக நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. எல்லா உண்மைகளையும் உங்களிடம் சொல்ல முயற்சி செய்தபோது அவரையும் வெண்பாதான் கொன்று விட்டாள் அப்போது அங்கிருந்து நான் தப்பித்து போது வெண்பாவின் அடியாள்கள் என்னை ஒரு ரூம்பில் கட்டி வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து தப்பித்த போது தான் எனக்கு ஒரு கால் போய்விட்டது. இப்போ உங்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்லணும் தான் நான் இன்று வடமாநிலத்தில் இருந்து இங்கே வந்து சொல்கிறேன். வெண்பாவை நம்பாதீர்கள் என்று சொன்னதும், பாரதி எதுக்கு இப்படி துரோகம் பண்ண? என வெண்பாவிடம் கேள்வி கேட்க வெண்பா பதில் சொல்லாமல் சிரிக்கிறார். வெண்பா சிரித்துக் கொண்டே இருக்க பாரதிக்கு கோபம் அதிகமாக கொண்டே இருக்கிறது. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.