"யாராலையும் காப்பாத்த முடியாது சிலரை"மாஸாக மிரட்டும் ஆண்டவர்..கிழியுமாமுகத்திரை?குறும்படம் இருக்காம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று கமல் முதல் ப்ரோமோவில் ஒரு சிலரை யாராலும் இன்று காப்பாற்ற முடியாது என்று கூறி இருக்கிறார்.
உள்ளே இருக்கவங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது இன்று அவர்களுக்கு தெரிய வைக்கப்படும் என்று மாஸாக கமல் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
கமல் பேசும் தோரணையிலேயே தெரிகிறது இந்த வாரம் அசீம்க்கு அர்ச்சனை காத்துக் கொண்டு இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.
மகிழ்ச்சியை பகிர்ந்த ஜி பி முத்து, தான் போகிற இடமே வேறாம்..பிக் பாஸ்க்கு இனி என்ட் கார்ட்டா?
என்ன நடக்கப் போகிறதோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கமல் தோன்றி அந்த வாரம் முழுக்க நடந்த பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து பேசி வருகிறார். இது கடந்த ஐந்து சீசன்களிலும் நடந்து கொண்டிருக்கிறது .தற்போது ஆறாவது சீசனிலும் தொடர்ந்து வருகிறது. இதில் இந்த வாரம் யாருடைய பஞ்சாயத்தை கமல் பேசுவார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஏனென்றால் பல்வேறு பஞ்சாயத்துக்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது .இதில் எந்த பிரச்சனையை பற்றி பேசுவார், யாருக்கு என்ன தண்டனை கொடுப்பார்? யாருக்கு குட்டு கொடுப்பார், யாரை ஆதரிப்பார் என்று பல்வேறு விதமான கருத்துக்களும் கேள்விகளும் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது.
அசீம்க்கு தண்டனை கிடைக்குமா
போட்டியாளர்களில் பலர் அசீம் சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்டது அவருடைய விளையாட்டு யுக்தியாக இருந்தாலும் மோசமான கேரக்டராக இருக்கிறது என்று கருத்து கூறி வருகின்றனர். நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் அசீம் தான் எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக மைண்ட் கேம் விளையாடி தனக்கு சாதகமாக சில போட்டிகள் தன்னோடு சேர்த்துக் கொண்டு
இவருக்கு பிடிக்காத போட்டியாளர்களிடம் செய்து வந்த பிரச்சனைகள், அதுமட்டுமல்லாமல் தனலட்சுமி மீது இவர் வைத்த குற்றசாட்டுக்கு இன்று பதிலடி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.
கடந்த வாரம் கொடுத்த வார்னிங்
கடந்த வாரமே அசீம் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக இருந்தது. ஆயிஷாவை வாடி போடி என்று பேசி அசீம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அத்தனைக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக கமல் சக போட்டியாளர்களால் ரெட் கார்ட் கொடுத்து அசீம்க்கு வார்னிங் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ளாமல் அசீம் நடந்து கொண்டதாகவும், அதனால் கமல் இந்த வாரம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
கமல் கூறிய உள்குத்து வார்த்தை
இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் கமல், என்ன நடந்தது? என்று உங்களுக்கு தெரியும், எனக்கும் தெரியும். ஆனா, உள்ள இருக்கிறவங்களுக்கு தெரியமாட்டுக்குது. பழி போடுவது என்பது ரொம்ப ஈசி ஆனால் பழியை தாங்குவது ரொம்ப கஷ்டம் .அது அவங்களுக்கு புரிய வைக்கணும், சில பேரை காப்பாற்றி ஆகணும் ,சில பேரை யாராலும் காப்பாற்ற முடியாது! "என்று அவருக்கே உரிய குதர்க்கமான பேச்சால் பேசியிருக்கிறார். இதனை புரிந்து கொண்டவர்கள் பலர் ப்ரோமோவில் மட்டும் இப்படி கருத்து தெரிவித்தால் போதாது, உள்ளேவும் போட்டியாளர்களுக்கு புரிகின்ற மாதிரி அறிவுரை கூறி நடத்தி வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.