தொடர்ந்துவரும் வாய்ப்புகள்..ஆனால் அண்ணாச்சியை முதலாவதாக பார்த்த ராஜூ.. காரணம் இதுதானாம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ராஜு முதலாவதாக இமான் அண்ணாச்சியை சந்தித்துள்ளார்.
ராஜுவுக்கு பல சினிமா பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் போது முதலாவதாக அதையெல்லாம் பார்க்காமல் அண்ணாச்சியை பார்த்ததற்கான காரணம் பற்றி கூறியுள்ளார்.
துண்டு துண்டுகளாக சிதறிய தீவுகள்.. எரிமலை வெடிப்பால் சின்னாபின்னமான டோங்கோ..புதிய சாட்டிலைட் படங்கள்
ஐந்தாவது சீசன் டைட்டில் வின்னர்
தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்று இருக்கும் ராஜூவுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். தற்போது இவருடைய திடீர் செய்கை ரசிகர்களின் மத்தியில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களாக கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கும் ராஜு தற்போது யாரும் எதிர்பார்க்காத செயலை செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் திடீரென்று இமான் அண்ணாச்சியை சந்தித்துள்ளார்.
வலி நிறைந்த வார்த்தை
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும் சரி இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பும் சரி இவர் தன்னுடைய திறமையை வெளி காட்டுவதற்காக ஒவ்வொரு இடத்திலும் பல கஷ்டங்களை அனுபவித்தும் ஏமாற்றங்களையும் அனுபவித்துள்ளார். அதனால்தான் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய மனைவி வரும் போது முதலாவதாக அவரிடம் இவர் இனி வெளியே சென்று வாய்ப்புக்காக அலைய வேண்டிய நிலை வராது என்று கேட்டிருந்தார். இதிலிருந்து இவருடைய வலியின் வேதனை பலருக்கும் புரிந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது இவருடைய வெற்றிக்கு கிடைத்த வெகுமதியாக பலர் இவருக்கு வாழ்த்துக்களை மட்டுமல்லாமல் வாய்ப்புகளையும்
வழங்கி வருகிறார்களாம்.
அதிகரிக்கும் படவாய்ப்புகள்
பலர் இவரிடம் புதியதாக போன் செய்து வாய்ப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் இன்னும் இவர் சென்று நேரில் சந்திக்கவில்லை. விரைவில் ஒவ்வொரு இடத்தில் சந்திப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அதை முடித்துவிட்டு அனைவரையும் நேரில் சென்று சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார் .இந்நிலையில் இவர் முதலாவதாக இமான் அண்ணாச்சியை சென்று பார்த்திருக்கிறார் இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு பட வாய்ப்புகள் தற்போது கதவை தட்டி இருக்கும் போது அதை விட்டுவிட்டு எதற்காக இவர் இப்படி செய்தார் என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Recommended Video
ராஜுவின் திடீர் செய்கை
ஏற்கனவே இமான் அண்ணாச்சி தனக்கு கொரோனா சிம்டம்ஸ் ஒருசில இருப்பதால் தான் இவர் டெஸ்ட் எடுத்துவிட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளார். அதனால்தான் இவர் பிக் பாஸ் கிராண்ட் பினாலே அன்று வரவில்லையாம். ஆனால் தினமும் ராஜூவிடம் மணிக்கணக்கில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்களாம். பேசும்போது தினமும் எப்போது வருகிறாய் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாராம். அதனால் அவரை முதல் ஆளாக சென்று பார்த்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் இவருக்காக இமான் அண்ணாச்சியின் சிறப்பாக கேக் முதல் பல புத்தகங்களையும் வாங்கி பரிசளித்துள்ளார். அது மறக்க முடியாத அவருடைய அன்பு என்று கூறியுள்ளார்.