சத்தம் இல்லாமல் சாதித்து காட்டிய எதிர்நீச்சல் சீரியல்..குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி இன்றோடு 200 எபிசோடு ஒளிபரப்பாக இருப்பதால் தற்போது அதனை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட நாளுக்குள் சன் டிவியில் டிஆர்பியில் பிற சீரியல்களை விட முன்னணியில் வந்த சீரியலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அண்ணன் தம்பி கதை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மதுரையை மையமாக கொண்ட அண்ணன் தம்பி கதையை பற்றியதாக இருந்து வருகிறது. அதுவும் அண்ணனாக குணசேகரன் வீட்டை கட்டிக்காத்து தன்னுடைய குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். ஆனால் அவருடைய ஆண் ஆதிக்கத்தால் அந்த வீட்டிற்கு வந்த பெண்கள் படும் பாடு பற்றி எதிர்நீச்சல் சீரியல் எடுத்துரைத்து வருகிறது. இந்த மாதிரி தான் தற்போது கூட பல பெண்கள் வீட்டின் கவுரவம் மரியாதை என்கிற பெயரில் திறமைகளை ஒழித்து வைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே முடங்கி விடுகிறார்கள் என்று இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமானார் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

எழுதப்படாத சட்டம்
நான்கு அண்ணன், தம்பிகள் இருக்கும் நிலையில் நான்கு பேரும் படித்த பெண்களை திருமணம் செய்து கொண்டால் தான் வீட்டின் கவுரவம் இருக்கிறது என்ற என்று இந்த சீரியலில் இருக்கும் அனைவருக்கும் படித்த பெண்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆனால் படுத்திருந்தாலும் வீட்டு வேலைகளையும், சமையல் வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்பது இவர்களுக்கு எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு முதல் மூன்று மருமகள்களும் வீட்டின் வேலைகளை செய்து கொண்டு சலிப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

இனி வரும் ஆட்டம்
கடைசி மருமகளாக இந்த சீரியலில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜனனி இனி எடுக்கும் முயற்சியினால் பெண்கள் தங்களுடைய சுய கவுரவத்தை நிலை நாட்டப் போகிறார்கள் என்று கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியல் திரைப்படங்களின் சாயல் என்று கூறி வந்தாலும் இதுவும் நல்லாக தான் இருக்கிறது பிற சீரியலோடு ஒப்பிடும்போது இதற்கு விறுவிறுப்பு அதிகரிப்பாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

கொண்டாட்டம்
தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே எதிர்நீச்சலின் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் சண்டை சச்சரவுகளுக்கும் மிரட்டல்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வந்தாலும் தற்போது இந்த சீரியலில் 200 எபிசோடுகளை கடந்துள்ளது. அதன் வெற்றியை சீரியல் அணியினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து புகைப்படங்களை தங்கள் பங்குக்கு பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications