ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.. பாட்டுப் போட்டியில் பட்டையைக்கிளப்பும் இசைவாணி மற்றும் ராஜலட்சுமி
சென்னை: பாட்டுப்பாடி பஞ்சாயத்தை தொடங்கியிருக்கும் இசைவாணி மற்றும் ராஜலட்சுமியின் லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
யார் பெரியவர் என்று தற்போது பாட்டு பாடி இசை வாணியும் ராஜலட்சுமியும் சமூக வலைத்தளத்தை கலக்கி இருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் பிரபலம்
விஜய் டிவியின் பிரபலமான மற்றும் நாட்டுப்புற பாடகியான ராஜலட்சுமி கானா பாடகி இசைவாணியுடன் சேர்ந்து கலக்கலாக தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று இவர்கள் இருவரின் பாடல்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே கிராமப்புறங்களில் பாட்டு பாடிக் கொண்டிருந்த ராஜலட்சுமி விஜய் டிவியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான ஒரு பாடகியாக மாறியிருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இவரும் இவருடைய கணவரும் சேர்ந்து தங்களுடைய நாட்டுப்புற பாடலை உலகமெங்கும் பிரபலப் படுத்தி இருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ராஜலட்சுமி தன்னுடைய கணவருடன் சேர்ந்து பல்வேறு யூடியூப் பாடல்களை மட்டும் இல்லாமல் திரைப்பட பாடல்களையும் பாடி வருகிறார். இவர் பாடிய புஷ்பா திரைப்படத்தின் சாமி பாடல் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கும் நிலையில் கானா பாடகியான இசை வாணியை சந்தித்துள்ளார். கானா பாடகியாக மட்டுமல்லாமல் திரைப்பட பாடல்களை பாடிக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமாக இருந்து வரும் நிலையில் இவரும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமடைந்து இருக்கிறார்.

சந்திப்புக்கான காரணம்
இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியேறிய பிறகு பல மேடை நிகழ்ச்சிகளில் பாட்டு பாடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ராஜலட்சுமி மற்றும் இசை வாணியின் திடீர் சந்திப்புக்கான காரணம் என்னவாக இருக்கும் இருவரும் சேர்ந்து ஏதேனும் புதிய திரைப்படங்களில் பாட்டு பாட போகிறார்களா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இவர்கள் இருவருடைய பாடல்களும் அழகாக இருக்கிறது என்றும் பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல இவர்களை கலாய்த்து வருபவர்கள் நெகட்டிவ் கருத்துக்களையும் அனுப்ப தவறவில்லை.

ரசிகர்களால் பகிரப்படும் வீடியோ
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இசை வாணி மற்றும் ராஜலட்சுமி இருவருமே தற்போது ஜோடியாக சேர்ந்து பாட்டுபாடி இருக்கும் வீடியோவை இசை வாணியின் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இசைவாணி மற்றும் ராஜலட்சுமி இருவரும் பாட்டு பாடிக் கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் ராஜலட்சுமியின் கணவர் செந்தில் தானும் இதில் கலந்து கொள்ளலாமா? ? கலந்து கொள்ள வேண்டாமா??என்ற குழப்பத்திலேயே பாட்டு பாடி வருகிறார். இந்த வேடிக்கையான வீடியோஸ் இவர்களுடைய ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications