பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகும் கதாநாயகி!! மீண்டும் முதலில் இருந்தா? காரணம் இதுதானா!?
சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஒரு சில நாட்களுக்கு முன்பு சாய் காயத்ரி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அதுதான் காரணமா? என்று கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இந்த தகவல்களுக்கு சாய் காயத்ரி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்காமல் தான் இருந்து வருகிறார்.

அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பல வருடங்களாகவே நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்ட இந்த சீரியலில் பல நடிகர்கள் ஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்போது இல்லை. ஒரு சில நடிகர்கள் சீரியலில் இருந்து விலகி இருக்கின்றனர் .அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது புதியது அல்ல. ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி அறிமுகமானார் .ஏற்கனவே இவருக்கு முன்பு விஜே தீபிகா இந்த கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது சாய் காயத்ரி மீண்டும் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஈரமான ரோஜாவே
சாய் காயத்ரி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் மூலமாக ரசிகர்களின் மனதை மொத்தமாக கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய கியூட்டான நடிப்பு துருதுருவென சேட்டைகள் இவருக்கும் அவர் அந்த சீரியலின் கதாநாயகனுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. அதனால் பலருடைய ஸ்டேட்டஸ் சாங்குகளில் இவர்களுடைய போட்டோக்கள் இடம் பிடித்து வீடியோக்களாக பரவி வந்தது. ஈரமான ரோஜாவே சீரியல் முதல் பாகம் முடிவடையும்போது இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி இருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது பாகத்தில் இல்லையே
நாம் இருவர் நமக்கு ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் மீண்டும் சாய் காயத்ரி வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இவரை போலவே இன்னொரு கதாநாயகியாக இருந்த பவித்ரா மீண்டும் அந்த சீரியலில் இணைந்திருக்கும் நேரத்தில் இவர் அந்த சீரியலை விட்டு வந்து விட்டார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் ஏற்கனவே இரண்டு நடிகைகள் மாறிய நிலையில் மூன்றாவதாக தான் சாய் காயத்ரி வந்திருந்தார். சாய் காயத்ரி இந்த கேரக்டரில் நடிக்க வந்தபோது முதலில் ரசிகர்கள் பலர் இவர் இந்த கேரக்டருக்கு செட் ஆகவில்லை குறிப்பாக கண்ணனுக்கு அக்கா மாதிரி இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது கேரக்டரோடு நன்றாகவே செட்டாகி விட்டார். இந்த நிலையில் இப்போது இவரும் விலக இருக்கிறார் என்ற செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கிறது.

திரைப்படத்தில் அறிமுகம்
ஒரு சில நாட்களுக்கு முன்பு சாய் காயத்ரி தான் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகி டப்பிங் வேலை முடிந்திருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த பிறகு தான் இந்த செய்தியை பலரும் பரப்பி வருகின்றனர் .வெள்ளி திரையில் சாய் காயத்ரி அறிமுகம் ஆகி இருப்பதால் இனி சீரியலில் நடிப்பதற்கு அவருக்கு டைம் இருக்காது அதனால் இந்த சீரியலை விட்டு அவர் விலக வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தாலும் இந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக இப்போது இவர் ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்து இருக்கிறார் இந்த நிலையில் இந்த இடத்தை விட்டு இவர் சென்ற பிறகு மீண்டும் யார் வர போகிறார்களோ? என்று சிலர் புலம்பி வருகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications