ஆண் குழந்தை பிறந்தது.. சஞ்சீவ் போட்ட போட்டோ!.. இனி என்னால் முடியாது! ஆல்யா பதிலால் ஃபேன்ஸ் அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியான ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
விஜய் தொலைகாட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது ராஜா ராணி சீரியல். இதில் ஆல்யா மானசாவும் சஞ்சீவும் லீடு ரோல் செய்திருந்தார்கள். வீட்டில் பணிப்பெண்ணான ஆல்யாவை எஜமானரின் மகன் சஞ்சீவ் திருமணம் செய்து கொள்வது, அந்த பெண்ணை அந்த குடும்பத்தினர் மருமகளாக பார்க்காமல் வேலை செய்யும் பெண்ணாகவே பார்ப்பது என கதை களம் சூடாக நகர்ந்து சுபமாக முடிந்தது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஐலா சையது என்ற பெண் குழந்தை உள்ளது.

ராஜா ராணி 2
இதன் வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் தொடங்கப்பட்டது. இதில் ஆல்யா மானசா நடித்திருந்தார். சஞ்சீவுக்கு பதில் சித்து நடித்திருந்தார். இந்த சீரியலில் போலீஸ் அதிகாரியாக துடிக்கும் சந்தியா எனும் கேரக்டரில் ஆல்யா நடித்திருந்தார். ஆனால் பெண் என்றால் வீட்டு வேலை செய்ய வேண்டும், மாமனார் மாமியாரை கவனித்துக் கொள்ள வேண்டும்.

கதை என்ன
கணவரை அன்போடு கவனித்து கொள்ள வேண்டும். இதுதான் மனைவியின் வேலை என நினைக்கும் மாமியார்! மாமியாருக்கு பிடித்த மருமகளாக சந்தியா இருப்பாரா இல்லை சந்தியாவின் கனவை நனவாக்கும் கணவராக சரவணன் இருப்பாரா என்பதுதான் மீதி கதை. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆல்யா மீண்டும் கர்ப்பமானார்.

இரண்டாவது கர்ப்பம்
இதனால் சீரியலில் இருந்து அவர் விலகினார். அவருக்கு பதிலாக தற்போது ரியா அந்த சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆல்யாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததாக சஞ்சீவ் சமூகவலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அந்த குழந்தைக்கு Arsh என பெயரும் சூட்டியுள்ளார்கள். சஞ்சீவ் - ஆல்யா ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஆல்யாவுக்கு ஆண் குழந்தை
இந்த நிலையில் குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் கழித்து ராஜா ராணி 2 சீரியலுக்கு ஆல்யா வருவார் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவரோ இனி என்னால் முடியவே முடியாது. சந்தியாவாக நடிக்க வரவே மாட்டேன் என தெள்ளத் தெளிவாக கூறிவிட்டாராம். இதனால் இனி சந்தியா கேரக்டரில் ரியாவே தொடருவார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications