சூட்டிங் ஸ்பாட்டில் திடீர் தீ விபத்து... நொடி பொழுதில் உயிர் தப்பிய ஸ்ரீகுமார்
சென்னை: வானத்தைப்போல சீரியலின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நடந்த விபத்தில் ஸ்ரீகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.
கையில் நெருப்போடு நடைபெற்ற சண்டைக் காட்சியில் தனது கால் பகுதியில் தீ பிடித்தாலும், நொடிப் பொழுதில் தப்பி விட்டேன் என்று உருக்கமாக ஸ்ரீகுமார் கூறியிருக்கிறார்.
தீ விபத்தில் இருந்து தப்பிய ஸ்ரீகுமாருக்கு ரசிகர்கள் பலர் அறிவுரைகளை கூறி வருகிறார்கள்

ரசிகர்களை கவர்ந்த கதாநாயகன்
திரைப்படங்களாக இருந்தாலும் சரி சீரியல்களாக இருந்தாலும் சரி ஒரு சில நடிகர்கள் நடிப்பு என்று வந்துவிட்டால் தங்களுடைய முழு உழைப்பையும் அதில் கொட்டுகிறார்கள். அந்த வகையில் ஒருவராக இருந்து வருகிறார் ஸ்ரீகுமார். இவர் சின்னத்திரையின் கதாநாயகனாக பல வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தாலும் பலருக்கும் பேவரைட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலின் முத்தரசு எனும் கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பதிந்து போனவர். தற்போது சன் டிவி சீரியலில் சின்ராசுவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்பவும் ஒரு தீ விபத்து
தனது கால்களின் பக்கத்தில் தீ விழுந்தாலும் நல்ல வேலையாக நானும் என்னோடு சண்டையிட்டவரும் தீயில் அகப்படாமல் தப்பிவிட்டோம். அதற்கு கடவுளுக்கு நன்றி..!! நான் எனது கால்களில் சுட்டுக் கொண்டேன். சண்டை எப்போதும் ஆபத்தானது தான் ஆனால் அதை நான் ரசிக்கிறேன் என்று ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் பதறிப்போன ரசிகர்கள் பலர் கவனமாக இருக்கும்படியும், உங்கள் ஆர்வத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் வணங்குகிறோம் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

எதிர்பாராத விபத்து
தற்போது வானத்தைப்போல சீரியலில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை ஸ்ரீகுமார் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் பதறிப் போயிருக்கின்றனர். அதில் ஸ்ரீகுமார் கருப்பசாமி கெட்டப்பில் உடை அணிந்து எதிரியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கையில் அருவாளும் ஒரு கையில் தீ பந்தத்தையும் வைத்துக்கொண்டு இவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். சண்டை போடும்போது எதிர்பாராத விதமாக இவருடைய கையில் இருந்த தீப்பந்தத்தின் நெருப்பு கீழே விழுந்து இவருடைய கால்களை உரசி விடுகிறது.

ரசிகர்களின் கருத்து
தனது கால்களின் பக்கத்தில் தீ விழுந்தாலும் நல்ல வேலையாக நானும் என்னோடு சண்டையிட்டவரும் தீயில் அகப்படாமல் தப்பிவிட்டோம். அதற்கு கடவுளுக்கு நன்றி..!! நான் எனது கால்களில் சுட்டு விட்டேன். சண்டை எப்போதும் ஆபத்தானது தான் ஆனால் அதை நான் ரசிக்கிறேன் என்று ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் பதறிப்போன ரசிகர்கள் பலர் கவனமாக இருக்கும் படியும், உங்கள் ஆர்வத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் வணங்குகிறோம் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications