மீராவை புரிந்து கொண்ட கௌதம்.. புது பாதையில் திரும்பிய கண்ணான கண்ணே!!
சென்னை: சன் டிவியில் டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் கண்ணான கண்ணே சீரியலின் எதிர்பாராத மாற்றம் ரசிகர்களிடம் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இனி புதிய கோணத்தில் இது பயணிப்பது தெரிந்ததும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மகளின் பாச போராட்டம்
சன் டிவியில் இரவு 8.30மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் பல ரசிகர்களின் பேவரைட் சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் அப்பா மகளின் பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மகளை வெறுக்கும் அப்பாவாக பிரித்திவிராஜ் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அப்பாவின் பாசத்திற்காக மீரா கேரக்டரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் ரசிகர்களையும் பீல் பண்ண வைத்து வருகிறார். நடிக்கச் சொன்னால் இவர்கள் கேரக்டராகவே மாறி இருக்கிறார்கள்.

வெளியான சந்தோஷின் உண்மை குணம்
மீராவின் சகோதரியாக ப்ரீத்தி இதுவரைக்கும் பாசமாக இருந்தாலும் தன்னுடைய காதலை மீரா எதிர்ப்பதால் தன்னுடைய அக்காவே தனக்கு எதிரியாக நினைத்து விட்டார். தற்போது பிரீத்தி சந்தோஷ் திருமணத்திற்கு பிறகுதான் சந்தோஷம் இயல்பான குணம் ப்ரீத்திக்கு தெரிந்துள்ளது. ப்ரீத்திக்கு மட்டுமல்லாமல் கௌதமும் அவருடைய குடும்பமும் சந்தோஷின் உண்மை குணத்தை அறிந்து குடும்பமே அதிர்ந்து போயிருக்கிறது. இதை ஆரம்பத்திலிருந்து எத்தனையோ முறை யுவா மற்றும் மீரா எடுத்துக்கூறியும் இவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை தற்போது இவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்.

புரிந்துகொண்ட கௌதம்
இதுவரைக்கும் தான் எடுக்கும் முடிவு தான் சரி என்று நினைத்துக்கொண்டிருந்த கௌதம் முதல்முறையாக மீராவின் பேச்சை கேட்காததால் ப்ரீத்தியின் வாழ்க்கை வீணாகி விட்டதே என்று பீல் பண்ணியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ப்ரீத்தியின் வாழ்க்கைக்காகவும் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் சந்தோஷுக்கு எழுதிக் கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். சந்தோஷ் குடும்பத்தினர் மீரா கௌதம் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றி இவர்களை ஏழ்மையான நிலைக்குக் கொண்டுசென்று பழிவாங்க வழி செய்திருக்கிறது.

கதையில் திருப்புமுனை
சந்தோஷ் அத்தை மேனகாவின் பேச்சைக் கேட்டு நடப்பதால் தற்போதைய ப்ரோமோவில் மேனகா சந்தோஷ், உன் கையால் ப்ரீத்தியின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி விடு என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் இனி நடக்கப்போவது என்ன என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. மீராவை எப்படியாவது கௌதம் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சொத்துக்களை எல்லாம் இழந்த பிறகு தன்னுடைய மகள் தான் தன்னுடைய சொத்து என்று புரிந்துகொண்டு கௌதம் எடுக்கும் முடிவு நிகழ்ச்சிக்கு முக்கிய திருப்புமுனையாக இருக்கப்போகின்றது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications