For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சன் டிவி டாப் சீரியலை விட்டு விலகும் கதாநாயகன்... காரணம் மனைவி தானா? லீக்கான தகவல்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலக போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் ஒன்றில் நடித்து வந்த சஞ்சீவ் தற்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

சஞ்சீவ் மனைவி ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கும் இனியா சீரியலில் சஞ்சீவ் கதாநாயகனாக நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலை இன்றே நிறுத்த கூறி வந்த கடிதம்.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குனரின் முடிவு? எதிர்நீச்சல் சீரியலை இன்றே நிறுத்த கூறி வந்த கடிதம்.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குனரின் முடிவு?

கயல் சீரியல் நடிகர்

கயல் சீரியல் நடிகர்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ரசிகர்களின் மத்தியில் குறுகிய காலத்திலே நல்ல வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்றாக கயல் சீரியல் இருந்து வருகிறது . இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். கதாநாயகியாக கயல் கேரட்டரில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது கதாநாயகி அவதாரம் எடுத்ததும் இவருடைய ரசிகர்கள் இரட்டிப்பாக தொடங்கி விட்டனர் .இந்த சீரியலின் கதாநாயகி அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வரப்படுகிறது. ஆனாலும் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு சஞ்சீவ் இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

இது சரியாக வருமா

இது சரியாக வருமா

டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் சஞ்சீவ் அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கயல் சீரியலில் ரசிகர்கள் இப்போதுதான் கயல் மற்றும் சஞ்சீவ் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக தொடங்கி இருக்கிறது. அதற்கு இடையில் இப்படி ஒரு மாற்றம் நடைபெற்றால் அது சரியாக வருமா என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருக்கிறது. அதனால் சஞ்சீவ் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் செய்திகள் பரவி வருகிறது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சஞ்சீவ் சின்னத்திரை நடிகையான ஆலியா மானசாவை முதல் சீரியலில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலின் மூலமாக சின்னத்திரையில் ஒன்றாக பழகி திருமணம் செய்து கொண்ட பிறகு சஞ்சீவ் கயல் சீரியலிலும் ஆலியா ராஜா ராணி இரண்டாவது சீரியலிலும் நடித்துக் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலில் இருந்து ஆலியா விலகி இருந்தார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வருகிறார் .இந்த நிலையில் தற்போது ஆலியா மீண்டும் சன் டிவி சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

மனைவி சீரியலில் வாய்ப்பு

மனைவி சீரியலில் வாய்ப்பு


ஆலியா, இனியா என்ற சீரியலில் கதாநாயகி ஆக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவில் டிஆர்பி யில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இனியாவிற்கு கதாநாயகனாக சஞ்சீவ் ஆரம்பத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவர் அந்த சீரியலில் இப்ப வரைக்கும் கதாநாயகன் ரிஷி தான் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரிஷி இனியாவை திருமணம் செய்து கொடுமைப்படுத்துவதற்காக பிளான் செய்து கொண்டிருக்கும்போது இனியாவை காப்பாற்றுவதற்காக சஞ்சீவ் அந்த சீரியலில் வரலாம். சஞ்சீவ் தான் சீரியலின் கதாநாயகனாக இருக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது .ஆனால் இந்த தகவலை குறித்து சஞ்சீவ் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பதிலையும் கூறவில்லை. அதனால் பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும். கயல் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகுகிறாரா? இல்லையா? என்று. அதே நேரத்தில் தற்போது கயல் சீரியலில் ஒரு சில வாரங்களாகவே சஞ்சீவ் எபிசோடு அதிகமாக காட்டப்படாமல் தான் இருக்கிறது.

English summary
There are reports that Sanjeev is going to leave the Kayal serial which is being aired on Sun TV. Sanjeev, who acted in one season of Raja Rani on Vijay TV, is currently acting in Sun TV serial. There are reports that Sanjeev will play the lead role in Iniya serial, which is played by Sanjeev's wife Aaliya Manasa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X