பிக்பாஸில் கடைசி வரைக்கும் இருக்கும் போட்டியாளர்கள் இவர்கள் தானா??சக போட்டியாளர்களே சொல்லிட்டாங்களே
சென்னை: கடைசி மூன்று இடங்களில் இவர்கள் தான் வருவார்கள் என்று தற்போது ரசிகர்களும் அடித்துக் கூறி வருகின்றனர்.
ரசிகர்களின் கருத்து மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் இதனை உறுதி செய்து விட்டார்களே.
எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வது போல மாற்றம் இருக்குமா? ?என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது பிரச்சனைகளும், சுவாரசியமான நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதைய ஐந்தாவது சீசனிலும் அதுபோல நிகழ்ச்சிகள் பஞ்சமில்லாமல் நடந்துவருகிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது பனிரெண்டு போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். இதில் கடைசி வரைக்கும் இருக்கப்போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

யாருக்கு வெற்றி
இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் அதிகம் பரிச்சயம் இல்லாத போட்டியாளர்களாக இருந்தாலும் தற்போது பிரபலமடைந்து விட்டனர். இவர்கள் 50 நாட்களை கடந்து விட்டதால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதனால் இந்த சீசனில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளது. யார் வெற்றி கோப்பையை தட்டி பறிப்பார்கள் என்றும் கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்றும் பல்வேறு கருத்துகள் இப்போதே தொடங்கிவிட்டது .

புதுவிதமான டாஸ்க்
அதில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ரசிகர்களின் கருத்துப்படியே தங்களுடைய கருத்துக்களை வெளிக் காட்டி விட்டனர் என்று கூறி வருகின்றனர். நேற்றைய எபிசோட்டில் கமல் முன்னிலையில் போட்டியாளர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கப்பும் ஒரு ஜீரோ வும் கொடுத்து இருந்தனர் அதில் கப்கொடுக்கும் போட்டியாளர் 100 நாள் வரைக்கும் தன்னோடு தொடர வேண்டும் என்று ஆசைப்படும் நபரை குறிப்பதாகவும், ஹீரோ கொடுக்கும் நபர் மீது விருப்பமில்லை என்பதைக் குறிப்பதாகவும் டாஸ்க் கொடுத்து இருந்தது.

அனைவரின் கருத்தும் இதுதானோ
அதில் அதிகமான போட்டியாளர்கள் ராஜுவை தேர்ந்தெடுத்து இருந்தனர். அவரை தொடர்ந்து நிரூப் மற்றும் பிரியங்காவிற்கு அதிக கப்புகள் கிடைத்திருந்தது. இதனால் இவர்கள் 3 பேரும் கண்டிப்பாக கடைசி வரைக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வார்கள் என்று போட்டியாளர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதைத்தான் ஏற்கனவே ரசிகர்களும் கூறி வருகின்றனர். அதே கருத்தை தற்போது போட்டியாளர்களும் கூறியதை தொடர்ந்து உண்மை இதுவாகத்தான் இருக்குமோ என்று நம்பத் தோன்றுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications