Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரச்சிதாவை குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட கணவர்..அப்போ எல்லாமே பொய்தானா? அறிவுரை எடுபடுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதாவை பற்றி அவருடைய கணவர் திடீரென வெளியிட்ட பதிவு அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் அவருடைய கணவர் தினேஷ் அறிவுரைகளை கூறும் விதமாக பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவி பிரபலம்

விஜய் டிவி பிரபலம்

சின்னத்திரை நடிகையான ரச்சிதா பல வருட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார். விஜய் டிவியில் ஏற்கனவே பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானதும் இவருக்கு தான் டைட்டில் ஜெயிப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் விஜய் டிவி பிரபலங்களுக்கு அதிவத்துவமாக முக்கியத்துவங்கள் கொடுக்கப்படும் என்று அதிகமானோர் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்து வந்த நிலையில் போகப் போக ரச்சிதாவின் விளையாட்டு வேறு விதமாக மாறி இருக்கிறது. ரச்சிதாவின் பின்னாடியே இதுவரைக்கும் போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டர் சுற்றிக்கொண்டு இருந்தது, அதை குறித்து ரச்சிதா பெரிய அளவில் மறுப்பும் தெரிவிக்கவில்லையே என்று பலர் கூறி வந்தாலும் ரச்சிதாவின் ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

சின்ன பிரச்சனை தான்

சின்ன பிரச்சனை தான்

ரட்சிதா முதல் நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும். அவருடைய கணவர் ரச்சிதா வெற்றி பெற்று அவருடைய ஆசை நிறைவேற வேண்டும், ரசிகர்கள் ரச்சிதாவை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவை வெளியிட்டு இருந்தார் .அதற்குப் பிறகு ரச்சிதாவை பற்றி பல சேனல்களிலும் அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனைகள் அவ்வளவு பெரிய அளவில் இல்லை. சாதாரணமாக கணவன் மனைவிக்குள் வரும் சின்ன பிரச்சனை தான். அது தினேஷ் தனக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்து இரக்கிறார் என்பதை ரச்சிதா வெளியே வந்து பார்த்தாலே புரிந்துவிடும் என்று பலர் கூறி வந்தனர்.

மைனாவை குறித்த கருத்து

மைனாவை குறித்த கருத்து

பேட்டி ஒன்றில் பேசியிருந்த தினேஷ் ரச்சிதாவோடு ராபர்ட் மாஸ்டரும் மைனாவும் இல்லாமல் இருந்தாலே ரச்சிதா பைனல் வரைக்கும் செல்வார் என்று குறிப்பிட்டு இருந்தார். காரணம் மைனா நந்தினி வெளியே இருந்து ஒரு வாரம் விளையாட்டை பார்த்துவிட்டு சென்ற பிறகும் அவரோடு ராபர்ட் மாஸ்டரை சேர்த்து வைத்து பேசி ஜாலியாக இருந்து வருகிறார். உண்மையான தோழியாக இருந்தால் இப்படி செய்ய மாட்டார். பல வருடங்களாக நட்பாக இருக்கும் மைனா ரச்சிதாவின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும் விதமாக தான் நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று திடீரென பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

அறிவுரை எடுபடுமா

அறிவுரை எடுபடுமா

கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில், "இதுபோல மேலும் இதயங்களை வென்று கொண்டே இருங்கள். நீங்கள் பழி வாங்குபவர்கள், விசுவாசமற்ற நண்பர்கள் தேவையற்ற கதைகள், இவர்களை தவிர்த்து விட்டால் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். ரசிகர்களின் விருப்பப்படியே இறுதியில் வெற்றி பெறுவீர்கள். எல்லோரையும் போல உங்கள் விளையாட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தன்னுடைய ஆதரவை ரச்சிதாவிற்காக கூறியிருக்கிறார். அதுபோல தன்னுடைய ஓட்டு ரச்சிதாவிற்கு தான் என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இந்த வாரத்தில் ஜனனி மற்றும் மைனாவிற்கு ஓட்டு போட வேண்டாம் என்பதை குறிக்கும் விதமாக அவர்கள் இருவருக்கும் எக்ஸ் சிம்பல் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போ பரவி வந்த செய்திகள் எல்லாம் போய் தானா? இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத்தான் போகிறார்களா? என்று மகிழ்ச்சியோடு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பலர் அன்பாக வேண்டுகோள்களையும் வைத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+