சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு.. கேரளாவில் பாஜகவினர் போராட்டம்.. போலீஸ் குவிப்பு!
சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சபரிமலை கோவிலுக்குள் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் நுழைந்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பின் முதல்முறை 50 வயதிற்கும் குறைவான பெண்கள் இப்போதுதான் கோவிலுக்குள் சென்றுள்ளனர்.
அதிகாலை 3.45க்கு கோவிலுக்குள் சென்றவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்தனர். இது வீடியோவாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
|
பரிகாரம் செய்தனர்
இந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. இதையடுத்து கோவிலின் நடை அடைக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் பரிகார பூஜைகள் செய்யப்பட்டது. 1 மணி நேர பூஜை பின் மீண்டும் பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பாஜக எதிர்ப்பு
இதற்கு பாஜக உள்ளிட்ட இடதுசாரி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சிலர் காலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பாஜக எம்.பிக்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு வேண்டும் என்றே அந்த பெண்களை கோவிலுக்குள் அனுப்பியதாக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

போராட்டம் செய்கிறார்கள்
இந்த நிலையில் சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், கொல்லத்திலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரளாவின் மற்ற இடங்களிலும் பாஜகவினர் போராட்டம் செய்ய உள்ளனர்.
|
மகளிரணி போராட்டம்
பாஜக மகளிரணி சார்பில் இந்த் போராட்டம் நடக்கிறது. அதேபோல் கேரள தலைமைச்செயலகம் முன்பும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தற்போது கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications