ரயிலில் கேரளாவுக்கு போறீங்களா.. அப்போ அந்த சர்டிபிகேட் கட்டாயம்.. பினராயி விஜயன் உத்தரவு!
திருவனந்தபுரம்: வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கேரளா செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிதது வருகிறது.
ஒரு பக்கம் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் அல்லாடி வருகின்றனர். இது தவிர ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

கேரளாவில் அதிகரிக்கும் பாதிப்பு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இது வரை இல்லாத அளவுக்கு தினமும் உச்சபட்ச பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 43,529 பதிய பாதிப்புகள் பதிவாகி உச்சம் தொட்டது. கொரோனா காரணமாக 95 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் கொரோனா நேர்மறை விகிதம் 29.75% ஆக உயர்ந்து விட்டது.

முழு ஊரடங்கு
கொரோனாவை ஒழிக்க கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சாலை வழியாக செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இ-பாஸ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால்தான் கேரளா உள்ளே அனுமதிக்கப்டுகின்றனர்.

சாலை வழி செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள்
இதேபோல் கர்நாடகாவில் இருந்து சாலை வழியாக கேரளா செல்பவர்களும் இ-பாஸ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சாலை வழியில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்க ரயிலில் கேரளாவுக்கு செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ரயில் மூலம் செல்பவர்களுக்கு இ-பாஸ் கூட சரியான முறையில் கேட்கப்படாததால் வெளிமாநிலங்களில் இருந்து பலர் சர்வசாதாரணமாக கேராளாவுக்கு சென்று வந்தனர்.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
எனவே ரயில் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் வெளிமாநிலங்களில் ரயில் மூலம் கேரள செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ' கேரளாவுக்கு ரயில் மூலம்வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வருகை புரிகின்றனர். அப்படி வருபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் என்ற ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications