சந்திரமுகி பாம்பு மாதிரி.. கோவிலை காத்த ராட்சச முதலை! இப்போது.. கதறி அழும் கேரள மக்கள்! என்ன நடந்தது
திருவனந்தபுரம்: கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் சுத்த சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த கோவில் முதலை உயிரிழந்தது அந்த கோவில் பக்தர்கள் மத்தியில் பெருத்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரா என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற அனந்தபத்மநாப சுவாமி கோயில் ஒன்று உள்ளது.
ஏரியின் நடுவின் இந்தக்கோவில் அமைந்துள்ளது. கேரளாவில் ஏரியில் அமைந்து இருக்கும் ஒரே கோவில் இதுதான்.

கோவில் முதலை
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் மூலஸ்தானம் இதுதான் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கோவிலின் மையப் பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்திற்குள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று வசித்து வந்தது. பாபியா என்ற பெயிரிடப்பட்ட இந்த முதலை சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

பிரசாதம் மட்டுமே சாப்பிடும்
மாமிச உண்ணியான முதலை வெறும் அரிசி சாதம் மட்டுமே சாப்பிடும் என்பது வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கடவுளின் தூதுவராக உள்ள இந்த பாபியா முதலைதான் கோவிலை பாதுகாத்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கையும் தெரிவித்து வந்தனர். கோவில் குளத்தில் உள்ள மீன்களை கூட ஒருபோதும் இந்த முதலை சாப்பிட்டது இல்லை. சுத்த சைவ முதலையான இது அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அளிக்கும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வந்ததாக கூறப்பட்டது.

பெரும் அதிர்ச்சி
கோவில் வளாகத்தில் முதலை ஊர்ந்து வரும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. இந்த கோவில் குளத்திற்குள் முதலை வந்தது எப்படி? இதற்கு பெயர் வைத்தது யார் என யாருக்கும் தெரியவில்லை. தெய்வீக முதலையாக அறியப்பட்ட இந்த பாபியா தற்போது உயிரிழந்துவிட்டது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்துள்ளது.

எப்படி சைவ முதலையாக மாறியது
இந்தியாவில் பரவலாக காணப்படும் வகையை சேர்ந்த இந்த முதலை(mugger crocodile) வனப்பகுதிகளில் மீன்கள், பாலூட்டி வகைகளான மான்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடக்கூடியது என்று வனவிலங்கு நிபுணர்கள் சொல்கின்றனர். எனினும் பாபியா முதலையை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கோயில் பிரசாதத்தையே உண்டு வாழ்ந்து இருப்பதால் அதுவே பழக்கமாகி முதலை சைவமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications