இறுதி சடங்கு கூட செய்யவில்லை.. உதவுங்கள்.. கேரளாவில் நரபலி தரப்பட்ட தமிழ்ப்பெண்ணின் குடும்பம் கதறல்
திருவனந்தபுரம்: கேரளாவில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சிலையில், உயிரிழந்த இருவரில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த பத்மா என்பது அதிர்ச்சியை உருவாக்கியிருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த பத்மாவின் மகன் கேரளாவில் தனது தாயின் உடலை பெற சென்றிருக்கும் நிலையில் அம்மாநில அரசு தனக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த கொலை வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் மகன் செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

நரபலி
கேரளாவில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்னர் பத்தினம்திட்டா காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் லாட்டரி விற்பனை செய்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த பத்மா என்பவர் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் கவனிக்கத்தக்க வேண்டிய அம்சம் என்னவெனில், இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் இதே போல லாட்டரி விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக புகார் வந்திருந்தது. எனவே இந்த வழக்கை காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.

கைது
விசாரணையில் பத்மாவிடம் கடைசியாக பேசியது முகமது ஷபி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தது விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது பத்தினம்திட்டாவின் திருவல்லாவை சேர்ந்த பகவல் சிங் அவரது மனைவி லைலா இருவரும் பணக்காரர்களாக வேண்டும் என தன்னிடம் வந்ததாகவும், இதற்கு நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி இரண்டு பெண்களை கடத்தி நான்தான் நரபலி கொடுத்தேன் என்று ஷமி ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து பகவல் சிங் மற்றும் லைலாவையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

வழக்கு விசாரணை
இந்த வழக்கு விசாரணை பல உண்மைகள் வெளிவந்தன. இந்நிலையில், பத்மாவின் மகன் செல்வராஜ் தனது தாயின் உடலை பெற கேரளா சென்றுள்ளார். ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "நாங்கள் கேரளா வந்து மிகவும் கஷ்டப்படுகிறோம். இந்த விவகாரத்தில் எங்களுக்கு யாரும் உதவவில்லை. இந்த வழக்கை நடத்த என்னிடம் பணம் இல்லை.

உதவி இல்லை
தற்போதுவரை ரூ.60,000 செலவழித்துள்ளேன். என்னிடம் மேற்கொண்டு செலவழிக்க பணம் இல்லை. அம்மாவுக்கு இறுதி சடங்கு செய்ய கூட என்னிடம் பணம் இல்லை. எனது வேலையையும் இழந்திருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சரை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் வழக்கை அவர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதிகாரிகளும் எங்களுக்கு உதவவில்லை. டிஎன்ஏ பரிசோதனை அம்மாவின் உடலை உறுதி செய்ய வேண்டும்" என்று செல்வராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications