சிறுத்தைகள் “நோ பிராப்ளம்”.. விலைவாசி, வேலையின்மை பற்றி கவலைப்படுங்க மோடி - சீறிய ராகுல் காந்தி
திருவனந்தபுரம்: சிறுத்தைகளை திறந்துவிடுவதை பற்றி தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் மற்றும் வேலையின்மை விகிதம் ஆகியவற்றின்மீதும் பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு பாரதிய ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை 15 நாட்களும் பாஜக கொண்டாடுகிறது.
இதில் நாடெங்கும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே இந்தியா மகத்தான இந்தியா என்ற பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். அத்துடன் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நமோ ஆப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குவிந்த வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உலக தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களின் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் சினிமா, விளையாட்டு பிரபலங்களும் மோடியை வாழ்த்தியுள்ளனர்.

சிறுத்தைகள்
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் சென்றார். அங்கு ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவில் அழிந்து வரும் நிலையில் அந்த இனத்தை சேர்ந்த சிறுத்தைகளை மோடி திறந்துவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பேச்சு
இந்த நிலையில் கேரளாவில் ஒற்றுமை யாத்திரையின்போது பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "மதம், மொழி ரீதியாக நாட்டை உடைக்க பிரிக்கிறார்கள். இந்த யாத்திரை ஒற்றுமையாக்குவதற்கு நான் பேசுவதற்கு முன் இங்கு அருமையான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 3 தொழிலதிபர்கள் எப்படி நாட்டின் பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த நடன நிகழ்ச்சியில் காட்டினார்கள்.

வேலையின்மை
சிறுத்தைகளை இங்கு கொண்டு வந்து திறந்துவிடுவதை பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வேலையின்மை விகிதம் சரிவு ஆகியவற்றின் மீதும் பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
-
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications