சிறுத்தைகள் “நோ பிராப்ளம்”.. விலைவாசி, வேலையின்மை பற்றி கவலைப்படுங்க மோடி - சீறிய ராகுல் காந்தி
திருவனந்தபுரம்: சிறுத்தைகளை திறந்துவிடுவதை பற்றி தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் மற்றும் வேலையின்மை விகிதம் ஆகியவற்றின்மீதும் பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு பாரதிய ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை 15 நாட்களும் பாஜக கொண்டாடுகிறது.
இதில் நாடெங்கும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே இந்தியா மகத்தான இந்தியா என்ற பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். அத்துடன் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நமோ ஆப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குவிந்த வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், உலக தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களின் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் சினிமா, விளையாட்டு பிரபலங்களும் மோடியை வாழ்த்தியுள்ளனர்.

சிறுத்தைகள்
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் சென்றார். அங்கு ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவில் அழிந்து வரும் நிலையில் அந்த இனத்தை சேர்ந்த சிறுத்தைகளை மோடி திறந்துவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பேச்சு
இந்த நிலையில் கேரளாவில் ஒற்றுமை யாத்திரையின்போது பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "மதம், மொழி ரீதியாக நாட்டை உடைக்க பிரிக்கிறார்கள். இந்த யாத்திரை ஒற்றுமையாக்குவதற்கு நான் பேசுவதற்கு முன் இங்கு அருமையான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 3 தொழிலதிபர்கள் எப்படி நாட்டின் பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த நடன நிகழ்ச்சியில் காட்டினார்கள்.

வேலையின்மை
சிறுத்தைகளை இங்கு கொண்டு வந்து திறந்துவிடுவதை பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வேலையின்மை விகிதம் சரிவு ஆகியவற்றின் மீதும் பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications