கேரளாவில் களைகட்டும் ஓணம் பண்டிகை.. அத்தப்பூ கோலம், 64 வகை உணவு சமைத்து உற்சாக கொண்டாட்டம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் மக்கள் அத்தப்பூ கோலமிட்டும், 64 வகையான உணவுகளை சமைத்தும் கடவுள் வழிபாடு செய்து உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
கேரளாவில் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ள நிலையில் கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும்.

10 நாட்கள்
தமிழ்நாட்டில் பொங்கல் தமிழர் பண்டிகையாக கொண்டாடப்படுவதுபோல், கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை கேரளாவில் மலையாளம் மொழி பேசும் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் தொடங்கும் அஸ்தம் நட்சத்திரதின் முதல் நாளில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும்.

ஓணம் பண்டிகை
அதன்படி முதல் நாளில் இருந்து 10-வது நாள் வரை வீடுகளில் மக்கள் அத்தப்பூக்களால் கோலமிடுவர். இதேபோல் கடவுளை வரவேற்கும் விதமாக தினமும் புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பொருட்களை சமைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர். மேலும் 10 நாட்களும் மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவர். அதன்படி, கேரளாவில் நடப்பு ஆண்டுக்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகளில்
கொரோனாவால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீட்டு வாசலில் அத்தப்பூ கோலம் இடும் பெண்கள் கேரளாவின் பாரம்பரிய சேலையும் அணிந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

64 வகை உணவுகள்
தற்போது கேரளா அரசும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய நகரங்களில், இடங்களில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்பட பல இடங்களில் கோவில்களும் வண்ண விளக்குகளால் வெளிச்சம் வீசி வருகின்றன. மக்களும் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், 64 வகையான உணவுகளை சமைத்து இறைவனுக்கு படைத்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications