கேரளாவில் களைகட்டும் ஓணம் பண்டிகை.. அத்தப்பூ கோலம், 64 வகை உணவு சமைத்து உற்சாக கொண்டாட்டம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் மக்கள் அத்தப்பூ கோலமிட்டும், 64 வகையான உணவுகளை சமைத்தும் கடவுள் வழிபாடு செய்து உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
கேரளாவில் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ள நிலையில் கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும்.

10 நாட்கள்
தமிழ்நாட்டில் பொங்கல் தமிழர் பண்டிகையாக கொண்டாடப்படுவதுபோல், கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை கேரளாவில் மலையாளம் மொழி பேசும் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் தொடங்கும் அஸ்தம் நட்சத்திரதின் முதல் நாளில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும்.

ஓணம் பண்டிகை
அதன்படி முதல் நாளில் இருந்து 10-வது நாள் வரை வீடுகளில் மக்கள் அத்தப்பூக்களால் கோலமிடுவர். இதேபோல் கடவுளை வரவேற்கும் விதமாக தினமும் புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பொருட்களை சமைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர். மேலும் 10 நாட்களும் மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவர். அதன்படி, கேரளாவில் நடப்பு ஆண்டுக்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகளில்
கொரோனாவால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீட்டு வாசலில் அத்தப்பூ கோலம் இடும் பெண்கள் கேரளாவின் பாரம்பரிய சேலையும் அணிந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

64 வகை உணவுகள்
தற்போது கேரளா அரசும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய நகரங்களில், இடங்களில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்பட பல இடங்களில் கோவில்களும் வண்ண விளக்குகளால் வெளிச்சம் வீசி வருகின்றன. மக்களும் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், 64 வகையான உணவுகளை சமைத்து இறைவனுக்கு படைத்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications