Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டி நீ ஜெயிச்சிடுவியா?... ஜல்லிக்கட்டு (4)

எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. இது 4வது அத்தியாயம்.

Subscribe to Oneindia Tamil

-லதா சரவணன்

வீடு நிசப்தமாய் இருந்தது, பண்ணையாரும் அவர் மனைவியும் கோவிலில் பூரண கும்ப மரியாதை பெற சென்றுவிட்டார்கள். பதினெட்டுப்பட்டியும் சேர்ந்து எடுக்கும் விழா என்பதால் மிகவும் விமரிசையாக நடக்கும். ரோஜா தலைவலி என்று போகவில்லை. அவளின் தனிமை அவசியம் என்று பண்ணையாரும் மனைவியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். வீட்டில் யாருமில்லை என்னும் தைரியத்தில் கூட்டத்தில் இருந்து கழண்டு கொண்டு, ரோஜாவின் அறையில் அவள் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தான் பாண்டியிடம் தந்தை சொன்னதை கவலையோடு சொல்லிக்கொண்டு இருந்தாள் ரோஜா.

ப்பூ இவ்வளவுதானே இதுக்கா இப்படி பயப்படறே ? என் வீரத்தின் மேல் உனக்கு இதுதான் நம்பிக்கையா ?! காளையை அடக்கிட்டு தைரியமா உங்க வீட்டுப் படியேறி வந்து பொண்ணு கேட்கிறேன் வருத்தப்படாம இரு,

எனக்கென்னமோ பயமா இருக்கு பாண்டி, நீ ஜெயிச்சிடுவியா ? அகலமான கண்களில் எப்போது கொட்டுவேன் என்று நீர் எட்டிப்பார்த்தது. அவள் தலையை இலேசாத் தட்டி உனக்காக உயிரையும் கொடுப்பேன் ரோஜா.

Jallikkatu- Pongal series story

அவள் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். வீட்டிலே யாருமில்லை கேள்வியிலேயே அவன் உஷ்ண பெருமூச்சு தோன்ற,

இல்லைன்னு தெரிந்துதானே வந்தீங்க என்று இன்னும் அவனை ஒட்டிக்கொண்டாள் ரோஜா.

அவன் அவளை காற்றுப்புகாதபடி இறுக்கமாய் அணைத்தான். பாண்டியின் காதிற்குள் கொட்டில்ல வீரய்யனும், வள்ளியும் மட்டும் இருக்காங்க.

ஓஹோ நல்ல துணைதான் அவங்க நம்மளை ஒண்ணும் தொந்தரவு செய்யமாட்டாங்க. நம்மைப் போலத்தான் அவங்களும். நமட்டுச் சிரிப்புடன் குறவைக் கூத்தில் இன்றைய ஆட்டம் என்ன தெரியுமா ?! மறுநாள் காளையடக்கப்போகும் காதலனை சந்தோஷமாக வழியனுப்புவதாம் என் காதலி எப்படி ?

ரொம்பத் தைரியம் தான் உங்களுக்கு ... ?! நான் போறேன் பா...!?!

அப்பாதான் அனுமதி கொடுத்தாச்சே... இன்றைய இரவு நம்ம கல்யாணத்திற்கு உறுதி கிடைச்ச சந்தோஷமா இருக்கட்டும். நீ எனக்கு கிடைச்சா நான் கட்டாயமா நாளைக்கு ஜெயிச்சிடுவேன் ரோஜா.... அவன் கைகள் அத்துமீறி விளையாடின, தனிமையும், இரவும் கைகோர்த்துக்கொண்டு கதவை அடைத்தது?! ரோஜா அவனிடம் ஒன்றினாள். இளமையின் சிரிப்பும், சிணுங்கலும், வீரய்யனையும், வள்ளியையும் கூட நகைப்பிற்குக் கொண்டு போனது.

கேட்டிங்களா ? ஜல்லிக்கட்டுலே வெற்றியடைஞ்சிட்டா சின்னம்மாவுக்கும், பாண்டிக்கும் கல்யாணமின்னு அய்யா சொல்லிட்டாராம். இனிமே எல்லாம் உங்க கையிலேதான் இருக்கு. அவங்க கல்யாணம் நல்லபடியா நடந்ததும் நம்முடைய ஆசையையும் நிறைவேற்றிக்கலாம். இப்போ என் மனசு சந்தோஷமா இருக்கு குறவைக் கூத்து முடிய இன்னும் நாழியாகும் நாம போய் பார்க்கலாமா ?

இல்லை வள்ளி குறவைக் கூத்தைவிடவும் உன்கூட இருக்கும் நேரம் இனிமையா இருக்கு. இந்த நிலவொளியில் நான் இன்று என் இருப்பிடத்திற்குப் போகாமல் உன்னையே பார்த்துக்கொண்டு இருக்கப்போகிறேன். வீரய்யனின் காதற் கணைகள் லட்சுமியின் இதயத்திற்குள் நுழைந்தது!

(தொடரும்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+