பாண்டி நீ ஜெயிச்சிடுவியா?... ஜல்லிக்கட்டு (4)
எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. இது 4வது அத்தியாயம்.
-லதா சரவணன்
வீடு நிசப்தமாய் இருந்தது, பண்ணையாரும் அவர் மனைவியும் கோவிலில் பூரண கும்ப மரியாதை பெற சென்றுவிட்டார்கள். பதினெட்டுப்பட்டியும் சேர்ந்து எடுக்கும் விழா என்பதால் மிகவும் விமரிசையாக நடக்கும். ரோஜா தலைவலி என்று போகவில்லை. அவளின் தனிமை அவசியம் என்று பண்ணையாரும் மனைவியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். வீட்டில் யாருமில்லை என்னும் தைரியத்தில் கூட்டத்தில் இருந்து கழண்டு கொண்டு, ரோஜாவின் அறையில் அவள் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தான் பாண்டியிடம் தந்தை சொன்னதை கவலையோடு சொல்லிக்கொண்டு இருந்தாள் ரோஜா.
ப்பூ இவ்வளவுதானே இதுக்கா இப்படி பயப்படறே ? என் வீரத்தின் மேல் உனக்கு இதுதான் நம்பிக்கையா ?! காளையை அடக்கிட்டு தைரியமா உங்க வீட்டுப் படியேறி வந்து பொண்ணு கேட்கிறேன் வருத்தப்படாம இரு,
எனக்கென்னமோ பயமா இருக்கு பாண்டி, நீ ஜெயிச்சிடுவியா ? அகலமான கண்களில் எப்போது கொட்டுவேன் என்று நீர் எட்டிப்பார்த்தது. அவள் தலையை இலேசாத் தட்டி உனக்காக உயிரையும் கொடுப்பேன் ரோஜா.

அவள் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். வீட்டிலே யாருமில்லை கேள்வியிலேயே அவன் உஷ்ண பெருமூச்சு தோன்ற,
இல்லைன்னு தெரிந்துதானே வந்தீங்க என்று இன்னும் அவனை ஒட்டிக்கொண்டாள் ரோஜா.
அவன் அவளை காற்றுப்புகாதபடி இறுக்கமாய் அணைத்தான். பாண்டியின் காதிற்குள் கொட்டில்ல வீரய்யனும், வள்ளியும் மட்டும் இருக்காங்க.
ஓஹோ நல்ல துணைதான் அவங்க நம்மளை ஒண்ணும் தொந்தரவு செய்யமாட்டாங்க. நம்மைப் போலத்தான் அவங்களும். நமட்டுச் சிரிப்புடன் குறவைக் கூத்தில் இன்றைய ஆட்டம் என்ன தெரியுமா ?! மறுநாள் காளையடக்கப்போகும் காதலனை சந்தோஷமாக வழியனுப்புவதாம் என் காதலி எப்படி ?
ரொம்பத் தைரியம் தான் உங்களுக்கு ... ?! நான் போறேன் பா...!?!
அப்பாதான் அனுமதி கொடுத்தாச்சே... இன்றைய இரவு நம்ம கல்யாணத்திற்கு உறுதி கிடைச்ச சந்தோஷமா இருக்கட்டும். நீ எனக்கு கிடைச்சா நான் கட்டாயமா நாளைக்கு ஜெயிச்சிடுவேன் ரோஜா.... அவன் கைகள் அத்துமீறி விளையாடின, தனிமையும், இரவும் கைகோர்த்துக்கொண்டு கதவை அடைத்தது?! ரோஜா அவனிடம் ஒன்றினாள். இளமையின் சிரிப்பும், சிணுங்கலும், வீரய்யனையும், வள்ளியையும் கூட நகைப்பிற்குக் கொண்டு போனது.
கேட்டிங்களா ? ஜல்லிக்கட்டுலே வெற்றியடைஞ்சிட்டா சின்னம்மாவுக்கும், பாண்டிக்கும் கல்யாணமின்னு அய்யா சொல்லிட்டாராம். இனிமே எல்லாம் உங்க கையிலேதான் இருக்கு. அவங்க கல்யாணம் நல்லபடியா நடந்ததும் நம்முடைய ஆசையையும் நிறைவேற்றிக்கலாம். இப்போ என் மனசு சந்தோஷமா இருக்கு குறவைக் கூத்து முடிய இன்னும் நாழியாகும் நாம போய் பார்க்கலாமா ?
இல்லை வள்ளி குறவைக் கூத்தைவிடவும் உன்கூட இருக்கும் நேரம் இனிமையா இருக்கு. இந்த நிலவொளியில் நான் இன்று என் இருப்பிடத்திற்குப் போகாமல் உன்னையே பார்த்துக்கொண்டு இருக்கப்போகிறேன். வீரய்யனின் காதற் கணைகள் லட்சுமியின் இதயத்திற்குள் நுழைந்தது!
(தொடரும்)
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications