கொரோனா பரவல்.. பலாப்பழ விற்பனை மந்தம்.. வியாபாரிகள், விவசாயிகள் கண்ணீர்
தாராபுரம் : தாராபுரம் பகுதியில் பலாப்பழம் விற்பனை செய்யும் வியாபாரிகள் கொரோனா தொற்று காரணமாக விலை வீழ்ச்சியால் கவலை அடைந்துள்ளார்கள்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் அதிக அளவில் சாலையோர நடைபாதை வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . கொரோனா தொற்று காரணமாக சாலையோர கடைகளை நகராட்சி நிர்வாகம் அரசு அறிவுறுத்தலின் பேரில் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
கடலூர் ,புதுக்கோட்டை, பண்ருட்டி போன்ற இடங்களிலிருந்து பலாப்பழம் வரத்து அதிகரித்ததால் வியாபாரிகள் அதிக அளவில் பலாப்பழம் கொள்முதல் செய்து விற்று வருகின்றனர். இந்நிலையில் பலாப்பழம் கிலோ 15 ரூபாய்க்கு வாங்கி 19 ரூபாய்க்கு விற்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.

வேதனை
சராசரியாக கிலோ 40 ரூபாய்க்கு விற்க வேண்டிய பலாப்பழம் தற்போது கிலோ 10 ரூபாய்க்கு விற்கும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டதால் மிகுந்த வேதனையில் உள்ளனர். பொதுமக்களும் பலாப்பழத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. மேலும் பலாப்பழம் இரண்டு நாட்களில் அழுகிவிடும் என்பதால் இன்று இல்லாவிட்டால் என்றாவது விற்பனை ஆகிவிடும் என்றும் விட்டு வைக்க முடியவில்லை.

பயன்பாடு
இதனால் வியாபாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நிவாரண நிதி ரூபாய் 1000 அரசு வழங்கியது இரண்டு நாள் செலவுக்கு மட்டுமே பயன்பட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு சாலையோர வியாபாரிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி மற்றும் சாலையோர கடைகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

குடும்பம்
வியாபாரிகள், விவசாயிகள் ஏராளமானோர் கடனை வாங்கி வியாபாரத்திலும் விளைச்சல் செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த லாக்டவுனால் விற்பனை மந்த கதியில் உள்ளதால் அவர்களால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவதி அடைகிறார்கள். வியாபாரிகள் தினக்கடன் வாங்கியுள்ளதால் அன்றாடம் வரும் வியாபாரத்தில் குடும்பம் நடத்தவே சரியாக உள்ளது.

பலா விவசாயம்
இதில் எப்படி கடன் கொடுப்பது என்கிறார்கள். இந்த பலா விவசாயத்தை நம்பியும் அதன் விற்பனையால் கிடைக்கும் பணத்தை நம்பியும் ஏராளமான விவசாயிகள் வீட்டு விசேஷங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் தற்போது இந்த விற்பனை மந்தகதியால் அவர்களால் உணவு தேவையை பூர்த்தி செய்யவே முடியாத நிலை உள்ளதாக கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள். அரசு ஏதாவது நிவாரணம் வழங்கினால் ஓரளவுக்கு நஷ்டத்தை சரி கட்ட முடியும் என எதிர்பார்க்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications