விவசாயத்தை காத்திடு.. விவசாயியை வாழவிடு.. மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரம்
விவசாயிகளை வாழவிடு. விவசாயியின் அழிவு சமூகத்தின் பேரழிவு என்ற முழக்கத்தோடு மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சேத்தியாத்தோப்பு பகுதியில் மேற்கொண்டனர்.
கடலூர்: விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
விவசாயிகள் வாழ்வதா, சாவதா என்று அன்றாடம் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு சற்றும் கவலைப்படுவதில்லை. 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடி வரும் நிலையில் விவசாயம் குறித்து தமிழக அரசுக்கு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

மேலும், காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை தமிழக அரசு விட்டுக் கொடுக்கிறது. முல்லைப் பெரியாறில் நமக்குள்ள உரிமை மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆறுகளின் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிக்கப்படுகின்றன. காடுகளை அழித்து இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.
இது போன்ற விவசாயத்தை சார்ந்த எண்ணற்ற பிரச்சனைகள் தமிழ் நாட்டில் அதிக அளவில் எழுந்துள்ளன. ஆனால் இது பற்றி தமிழக அரசு வாயே திறப்பதில்லை. இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது விவசாயமும் விவசாயிகளும்தான்.

இந்நிலையில், விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விவசாயத்தை காக்க வேண்டும் என்று அதிகாரம் அமைப்பு சார்பில் சேத்தியாத்தோப்பு பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications