நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில மணிநேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.09 உயர்வு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.09 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
மாதாமாதம் டீசல் விலை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி டீசல் விலை கடந்த 2 மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. 9 கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து டீசல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ. 1.09 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வில் மாநில விற்பனை வரி அல்லது வாட் வரி சேர்க்கப்படவில்லை. அதனால் அந்த வரியெல்லாம் சேர்த்த பிறகு நகரம்தோறும் டீசல் விலை மாறுபடும்.
டெல்லியில் வரியை சேர்த்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.22 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போதைய டீசல் விலை ரூ.56.71 ஆக உள்ளது.
சென்னையில் ரூ.59.18க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசலின் தற்போதைய விலை ரூ. 60.50 ஆகும். மும்பையில் 63. 86க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ. 65.21க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் ரூ.60.11க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.61.38க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications