இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியது மத்திய அரசு... சர்க்கரை விலை உயர்கிறது!
டெல்லி: சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15-லிருந்து 40 சதவீதமாக உயர்த்துவதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ 3 முதல் 5 வரை உயர்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்படி, டெல்லியில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கேபினட் செயலர் அஜித் சேத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிப்பது என்றும், சர்க்கரை வர்த்தகத் துறைக்கு ஆறுதலளிக்கும் வகையில், ஏற்றுமதி மானியத்தை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கான பாக்கித் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக கரும்பாலைகளுக்கு வட்டியில்லாத கடனாக ரூ.4,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சர்க்கரை உற்பத்தியின்போது வெளிவரும் உபரிப் பொருளான எத்தனாலை, பெட்ரோலுடன் 5 சதவீதம் வரை கட்டாயம் கலக்கும் திட்டத்தை அமல்படுத்துவது, இதை மேலும் 10 சதவீதம் வரை கலப்பதற்கான முயற்சியை மேற்கொள்வது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன,' என்றார்.
சர்க்கரை விலை உயர்வு
அரசின் இந்த முடிவை அடுத்து, மொத்த சந்தையில் சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.60 வரை அதிகரித்தது. தலைநகர் டெல்லியில் எம்-30 ரக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.3,270 முதல் ரூ.3,400 வரை இருந்தது.
எஸ்-30 ரக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.3,250 முதல் ரூ.3,380 வரை விற்பனையானது.
ஆனால் மத்திய அரசின் முடிவை தொடர்ந்து, எம்-30 ரக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.3,320 முதல் ரூ.3,460 வரையும், எஸ்-30 ரக சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.3,300 முதல் ரூ.3,430 வரையும் உடனடியாக உயர்ந்தது.
இன்னும் சில நாள்களில் இந்த விலை மேலும் உயரும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கரும்பாலை சங்கம் வரவேற்பு
இதனிடையே, மத்திய அரசின் இந்த முடிவுகளை இந்திய கரும்பாலைகள் சங்கம் (இஸ்மா) வரவேற்றுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications