மல்லிகை விலை கிடுகிடு உயர்வு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் பூக்கள் வரத்து குறைவால் மல்லிகை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மல்லிகை, பி்ச்சி, கேந்தி, கனகம்பரம், ரோஜா, அரளி, சேவல், காக்கட்டான், கொழுந்து உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்துள்ளனர்.
விளையும் மலர்கள் அனைத்தையும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயில் தெப்பக்குளம் அருகே கொண்டு கோயிலுக்கு வருவோருக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது வழக்கத்தை விட சீசன் முடிந்தும் பனிப்பொழிவு நிற்கவில்லை. இதனால் பூக்கள் விலை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து அடியோடு குறைந்தது. குறிப்பிட்ட அளவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதனால் அதிக அளவில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய முடியவில்லை. மேலும் ரூ.10க்கு ஒரு விரல் அளவே கொடுக்க முடிந்ததால் பலர் வாங்காமல் சென்றனர். வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ ரூ.1750 ஆக பூவின் விலை தறுமாறாக ஏறியது. மல்லிகையி்ன் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டுள்ளதால் மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பூக்களின் கடுமையான விலை உயர்வின் காரணமாக பொதுமக்கள் பலர் விலை குறைந்த பூவான காக்கட்டான், பிச்சி பூக்களை அதிகளவில் வாங்கி சென்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications