நாளை முதல் புதிய ரயில் கட்டணம்... கூடுதல் கட்டணம் வசூலிக்க தனி கவுண்டர்கள்!
சென்னை: மத்திய அரசு அறிவித்த புதிய ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. நாளை அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் 25ம் தேதி ( நாளை ) முதல் அமலாகும் என ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா அறிவித்திருந்தார்.
சாதாரண மக்களைப் இந்த கட்டண உயர்வு பாதிக்கும் எனக் கூறி, இந்த திடீர் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும், நாடு முழுவதிலும் கடும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அறிவிக்கப் பட்டபடி நாளை முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கட்டண உயர்வு...
புதிய கட்டண உயர்வின் படி, முன்கூட்டியே பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்த பயணிகளிடன் மீதி கட்டணத்தை டிக்கெட் பரிசோதகர்கள் அல்லது முன்பதிவு அதிகாரிகள் வசூலிப்பார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்புக் கவுண்டர்கள்...
இதற்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம் போன்ற சில முக்கிய ரயில் நிலையங்களில் பிரத்யேகமாக சிறப்பு கவுண்டர்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது.

கூடுதல் கட்டணம்...
மேலும் கூடுதலான டிக்கெட் பரிசோதகர்கள் இப்பணிக்காக நியமிக்கப்பட உள்ளனர் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அவர்களுக்கு புதிய கட்டண உயர்வுப்படி கூடுதலாக வசூலிக்க வேண்டிய பட்டியல் வழங்கப் பட்டுள்ளது.

சீசன் டிக்கெட்...
சென்னை கோட்டத்தில் மட்டும் சராசரியாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சார ரயிலுக்கான சீசன் டிக்கெட் வைத்துள்ளனர். கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டபோதிலும் 25ஆம் தேதிக்கு முன்னர் சீசன் கட்டணத்தை புதுப்பித்தவர்களிடம், புதிய கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பது குறித்து தெற்கு ரயில்வே எதுவும் விளக்கமளிக்கவில்லை குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications