கர்நாடகாவை தொடர்ந்து சத்தீஸ்கரில் மீண்டும் வேட்டை- என்கவுண்ட்டரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!
டெல்லி: கர்நாடகா மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் மீண்டும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உக்கிரம் அடைந்துள்ளன. சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயக அமைப்பை ஆயுதப் போராட்டம் மூலம் மாற்றி கம்யூனிச அரசாங்கத்தை நிறுவுவதுதான் மாவோயிஸ்டுகளின் போராட்டம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக மலை மாவட்டங்கள், பழங்குடிகள் பகுதிகள் மாவோயிஸ்டுகளின் செங்கொடி ஓங்கி உயரப் பறந்தது.

ஆனால் மத்திய மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகள், பழங்குடிகள் பூர்வ நிலங்களில் இருந்து வெளியேறி மைய நீரோட்டங்களில் இணைதல் உள்ளிட்டவைகளால் மாவோயிஸ்டுகள் செல்வாக்கு சரிந்து போனது. இப்போதும் நாட்டின் சில மாவட்டங்களில்தான் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. மாவோயிஸ்டுகளை முழுமையாக அழித்தொழிப்பது என்பதுதான் மத்திய அரசின் இலக்காகவும் உள்ளது.
இந்த நிலையில் அண்மையில் கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் மாவோயிஸ்டுகள் குழு, பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாதுகாப்பு தரப்பில் பதிலடி தரப்பட்டது. இதில் கர்நாடகா மாநில மாவோயிஸ்டுகள் குழு தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக் கொல்லப்பட்டார். 22 ஆண்டுகளாக கர்நாடகாவில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு தலைவர்தான் விக்ரம் கவுடா.
இதனையடுத்து இன்று சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படை தரப்பில் பதிலடி தரப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே சில மணிநேரங்கள் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் சுக்மா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications