பிரயாக்ராஜ் நகருக்கு சென்ற கவுதம் அதானி! குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் சிறப்பு வழிபாடு
பிரயாக்ராஜ்: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது குடும்பத்தினருடன் மகா கும்பமேளாவின் புனித திரிவேணி சங்கமத்திற்குச் சென்றார். சனாதனத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட அதானி குடும்பம் புனித கங்கை நதியிடம் ஆசீர்வாதம் பெற்றனர். கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பிரார்த்தனையும் செய்தனர்
மகா கும்பமேளா குறித்த தனது பிரமிப்பை வெளிப்படுத்திய அதானி, "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட அனுபவம் அற்புதமானது. இதைச் சிறப்பாக நடத்தி வரும் நிர்வாகத்தை நாம் பாராட்டியே தீர வேண்டும். இதற்காக நாட்டு மக்களின் சார்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வை எப்படி இவ்வளவு சிறப்பாக நடத்துகிறார்கள் என்பதை மேலாண்மை நிறுவனங்களே கூட ஆராய்ச்சி செய்யலாம். அவ்வளவு அற்புதமாக நடத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரைக் கங்கை தாயிடம் ஆசீர்வாதம் வாங்குவதைத் தாண்டி வேறு எதுவும் சிறப்பானது இல்லை" என்றார்

சனாதனத்தை மதிக்கும் அதானி குடும்பம்
சனாதன மரபுகள் மீது எந்தளவுக்கு ஒரு ஆழமான நம்பிக்கையை அதானி வைத்துள்ளார் என்பதையே அவரது இந்த பயணம் எடுத்துக் காட்டுகிறது. ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் சங்கமமாக மகா கும்பமேளா இருக்கிறது. இந்த நிகழ்வில் பக்தியின் ஒரு வடிவமாக மனிதக் குலத்திற்குச் சேவை செய்வதில் தனது குடும்பத்திற்கு எந்தளவுக்கு உறுதியான நம்பிக்கை வைத்துள்ளது என்பதையே அதானியின் பங்களிப்பு காட்டுகிறது.
#MahaKumbh2025 | Prayagraj, Uttar Pradesh: Adani Group Chairman, Gautam Adani along with his family performs 'aarti' at Triveni Sangam, Prayagraj pic.twitter.com/tuwQlac4sU
— ANI (@ANI) January 21, 2025
அதானியின் இந்த தன்னலமற்ற சேவைகளைப் புகழ்பெற்ற ஆன்மீக தலைவர் பிரசாத் சுவாமி பாராட்டினார். பிரசாத் சுவாமி மேலும் கூறுகையில், "கார்ப்பரேட் பொறுப்பு மற்றும் சமூக சேவைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அதானி குழுமம் இருக்கிறது. கவுதம் அதானி எப்போதும் தனது பணிவுக்காகத் தனித்துத் தெரிவார். யாராவது தன்னை அழைக்க வேண்டும் என காத்திருக்க மாட்டார். அவரே முன்னின்று சேவைகளைச் செய்வார்" என்றார
#MahaKumbh2025 | Prayagraj, Uttar Pradesh: Adani Group Chairman, Gautam Adani along with his family offers prayers at Triveni Sangam, Prayagraj pic.twitter.com/SMzXmwxM0R
— ANI (@ANI) January 21, 2025
ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்துவது
பிரயாக்ராஜ் நகருக்கு கவுதம் அதானி வந்ததும், பக்தர்களுக்குச் சேவை செய்வதில் அவரது குடும்பத்தினர் காட்டிய ஆர்வமும், சனாதன தர்மத்தின் மீது நவீன தலைமைக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. அதானி குழுமத்தைப் பொறுத்தவரை, சமூக சேவை என்பது அவர்களுக்கு வேலை இல்லை.. அதை ஒரு வாழ்க்கை முறையாகவே கடைப்பிடித்து வருகிறார்கள். மேலும், பணிவு, நம்பிக்கை மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய இந்திய பண்புகளுடன் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications