MS Dhoni: யப்பா.. அது தோனியோட குழந்தை இல்லை.. ஒரேயொரு புகைப்படத்தால் ரணகளமான சோசியல் மீடியா!
சென்னை: சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்சியில் தோனி கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இதனையடுத்து தோனிக்கு 2வது மகன் பிறந்துள்ளதாக சோசியல் மீடியாவில் விவாதமாகியது. ஆனால் அது சர்ஃபராஸ் கானின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
அண்மையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன், டுவைன் பிராவோ, அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், மைக் ஹசி, ஹர்பஜன் சிங், ஜகாட்டி, பத்ரிநாத் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னாள் வீரர்களுடன் இந்நாள் வீரர்கள் விளையாடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

அதேபோல் தோனியும் புதிய உற்சாகத்துடன் காணப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஏஆர் ரஹ்மானின் இசை கச்சேரியும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் சிஎஸ்கே வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஏஆர் ரஹ்மானின் இசை கச்சேரியை தோனி தனது மகள் ஸிவாவை மடியில் அமர வைத்து ரசித்தார். இதனை தோனி மனைவி சாக்ஷி பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தோனி ஒரு ஆண் குழந்தைகளுடன் சிஎஸ்கே ஓய்வறையில் இருக்கும் புகைப்படம் பரவியது. இதனால் தோனிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளதாக ஒரு சிலர் பேசத் தொடங்கினர். இது தோனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் விசாரித்த போது, அது சிஎஸ்கே அணியின் இளம் வீரரான சர்ஃபராஸ் கானின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் ரீயூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்க சர்ஃபராஸ் கானின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஐபிஎல் தொடரின் போது வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்போதும் கட்டுப்பாடு விதித்ததில்லை. இதனால் சர்ஃபராஸ் கானின் மகனை தோனி தூக்கி வைத்து கொஞ்சி இருக்கிறார்.
அந்த புகைப்படங்களை சர்ஃபராஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் சில ரசிகர்கள் உண்மை தெரியாமல் தோனியின் குழந்தை என்று பேச தொடங்கிவிட்டனர். வழக்கமாக தோனி குழந்தைகளுடன் அதிகம் செலவிடுவார். 2 ஆண்டுகளுக்கு முன் நடராஜனின் குழந்தையுடனும் தோனி நேரம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications