வருங்கால சிஎஸ்கே கேப்டன்.. ஆயுஷ் மாத்ரே பேட்டிங் ஆர்டரில் மாற்றம்.. ருதுராஜ் கொடுத்த மெகா அப்டேட்!
சென்னை: சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்குவது உறுதியாகி இருக்கிறது. இதனால் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே நம்பர் 3 பேட்டிங் வரிசைக்கு தள்ளப்படுவார் என்று தெரிகிறது. இதனால் ஆயுஷ் மாத்ரேவின் செயல்பாடுகள் பாதிக்குமா என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு அணியும் விளம்பரப் பணிகளை முடித்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை சிஎஸ்கே அணி 6வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக இளம் வீரர்களை கொண்ட அணியையும் தயார் செய்திருக்கிறது.

அதேபோல் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனையும் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதனால் சஞ்சு சாம்சன் - ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன்ஸ் டே நிகழ்ச்சியில் பங்கேற்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே அணிக்கு நானும், சஞ்சு சாம்சனும் தொடக்கம் கொடுக்க உள்ளோம் என்று அறிவித்தார்.
இது சிஎஸ்கே ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த முடிவு முன்னதாகவே எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே ஏற்கனவே இந்திய யு19 அணிக்காக நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடிய பழக்கம் கொண்டவர்.
அதேபோல் பவர் பிளேவில் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தால், ஆயுஷ் மாத்ரேவால் எளிதாக அந்த இடத்தை நிரப்பிட முடியும் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் கருதுகிறது. இதனை அஸ்வின் ஏற்கனவே அவரின் யூடியூப் சேனலில் பேசி இருந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் பேச்சு அமைந்துள்ளது.
இதனிடையே ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக உர்வில் படேல் களமிறங்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வளர்ந்து வரும் வீரரான ஆயுஷ் மாத்ரேவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர். இன்னும் சிலரோ, சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் ஆயுஷ் மாத்ரே என்றும் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications