பாரதி பக்கம்
காலைப் பொழுது
(தொடர்ச்சி)
என் றூரைத்துக் காக்கையிருக்கையிலே அன்ன மொன்று
தென்திசையினின்று சிரிப்புடனே வந்த தங்கே. (21)
அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து - வாழ்க.துணைவரே! (22)
காலை யினவெயிலிற் காண்பதெல்லாம் இன்பமன்றோ;
சால துமைக்கண்டு களித்தேன் சருவி நீர். (23)
ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்! என்றிடவே,
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம். (24)
அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்; - ஆங் காணும்!
மன்னர் அறம் புரிந்தால்., வையெமெல்லாம் மாண்பு பெறும். (25)
ஒற்றுமையால் மேன்மையுண்டாம்: ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே? (26)
என்று சொல்லி அன்னம் பற்ந்தாங்கே ஏகிற்றால்:
மன்று கலைத்து மறைந்தன வப் புட்களெல்லாம். (27)
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை:
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத்தோம். (28)