பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

காலைப் பொழுது

(தொடர்ச்சி)

என் றூரைத்துக் காக்கையிருக்கையிலே அன்ன மொன்று
தென்திசையினின்று சிரிப்புடனே வந்த தங்கே. (21)


அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து - வாழ்க.துணைவரே! (22)


காலை யினவெயிலிற் காண்பதெல்லாம் இன்பமன்றோ;
சால துமைக்கண்டு களித்தேன் சருவி நீர். (23)


ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்! என்றிடவே,
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம். (24)


அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்; - ஆங் காணும்!
மன்னர் அறம் புரிந்தால்., வையெமெல்லாம் மாண்பு பெறும். (25)


ஒற்றுமையால் மேன்மையுண்டாம்: ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே? (26)


என்று சொல்லி அன்னம் பற்ந்தாங்கே ஏகிற்றால்:
மன்று கலைத்து மறைந்தன வப் புட்களெல்லாம். (27)


காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை:
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத்தோம். (28)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+