பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
கவிதைக் காதலி
(தொடர்ச்சி)
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்து பின்வந்து காண்பொழுது ஐயகோ!
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்,
மிடிமை நோய் தீர்ப்பான் வீணர்த்ம் முகைப் (25)
களைந்து பின்வந்து காண்பொழுது ஐயகோ!
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்,
மிடிமை நோய் தீர்ப்பான் வீணர்த்ம் முகைப் (25)
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பான்
தெந்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து, அவன்
பணிசெய இசைந்தேன். பதகி நீ! என்னைப்
பிரிந்துமற் றகன்றனை, பேசொணா நின்னருள் (30)
இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்.
சின்னாள் கழித்தபின் - யாதெனச் செப்புகேன!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த் (35)
தன்மக னிடை என் தனையநீ யான்புலைப்
பன்றியாம் போது பார்த்துநில் லாதை!
விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடன்
துணிந்தெனைக் கொன்று தொலைத்தலுடன் கடனாம்.
பாவமிங் கில்லையென் பணிப்பிஃ தாகலின்! (40)
(தொடரும்)












Click it and Unblock the Notifications