For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சாதாரண வருஷத்துத் தூமகேது

தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச் சிறு மின்மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளிய்ைக கேண்மை கொண் டிலகும்
தூம கேதுத்ச் சுடரே, வாராய் ! (1)
எண்ணில் பல் கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னொடு வால் போவதென்கின்றார். (2)

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்யொ தே நீ
போதி யென்கின்றார் ; புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால். (3)

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறத்துபன் ணூறாண் டாயின!
உனதியல் அன்னியர் உரைத்திடத் கேட்டே
தெரிந்தனம், எம்முளே தெளிந்தவர் சங்கிலை. (4)

வாராய், சுடரே! வார்த்தை சில கேட்பேன் ;
தீயர்க்கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட வாழ்த்தி நீ
பொலை யென்கின்றார் ; பொய்யோ, மெய்யோ! (5)

ஆதித் தலைவி யானையின் படிநீ
சலித்திடுந் தன்மையால், தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாக் புனைதற் கேயென
விளம்பு கின்றனர் ; அது மெய்யோ, பொய்யோ? (6)

ஆண்டோர், எழுபத் தைந்தினில் ஒருமுறை
மண்ணை நீ அணுகும் வழக்கினை யாயினும்,
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கிறார்,மெய்யோ, பொய்யோ? (7)

சித்திகள் யாவும், சிறந்திடு ஞானமும்
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாய்
புகலு கின்றனர். அது பொய்யோ. மெய்யோ? (8)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X