வேளாண்மையும் ஆறுகள் இணைப்பும்
![]() தமிழர்களின் இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டும் இரண்டு செய்திகளை இத்தலைப்பு கொண்டுள்ளது.வேளாண்மை - தமிழன் ஏமாந்த வரலாற்றையும், ஆறுகள் இணைப்பு # தமிழன் ஏமாற்றப்படுகின்ற வரலாற்றையும் கூறுகின்றன. சங்க காலம் முதலே, தமிழர்களின் வாழ்விலும், நாட்டின் பொருளாதாரத்திலும் வேளாண்மை மையம் கொண்டிருப்பதைஇரப்போர் சுற்றம் புறப்போர் கொற்றம்உழவிடை விளைப் போர்என்ற சிலப்பதிகார வரிகள் தெரிவிக்கின்றன. சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம் சமகாலத்திய பிற சமுதாயங்களை விட மேம்பட்டு விளங்கியமைக்குக் காரணம், அவர்களின் தொழில்நுட்பத்தின், மண்வளம், நீர்வளம் மற்றும் பருவ காலங்களுக்கேற்ப பயிர்களை சரியான உழவியல் தொழில் நுட்பத்துடன்பயிரிட்டனர். வேளாண்மை வளர்ச்சிக்குத் தண்ணீரே ஆதாரம். ஆனால் மழை பெய்யும் நாட்களைக் குறைவாகக் கொண்ட தமிழ் நாட்டில்,மழை நீரைச் சேமிக்க ஏரிகள், குளங்கள் அமைத்து, ஆற்றுக்கால், ஊற்றுக்கால் தோண்டி, அணைக்கட்டுக்கள் கட்டி சிறந்த பாசனவசதிகளை ஏற்படுத்திய தொழில்நுட்பம் இன்றளவும் ஏற்புடையனவாக இருப்பதே அவற்றின் சிறப்புக்குச் சான்று. கல்வெட்டுச் செய்திகள் மூலம், சோழநாட்டின் நெல்விளைச்சலைக் கொண்டே சோழப் பேரரசர்கள் ஆட்சி நடத்தினர். போர்புரிந்தனர். உலகம் சுற்றினர். நெல் விளைச்சலில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்ஏக்கருக்கு 2 டன் விளைந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்க தக்க ஆலோசனைகளைக் கூற 4 நெல் சாகுபடி மற்றும் பாசனவல்லுனர்களை ஐ.நா. நிறுவனம் 1948இல் அனுப்பியது. அதில் 3 பேர் தமிழர்கள். ஒருவர் வங்காளி. தாய்லாந்து மக்கள் நேரடிநெல் விதைப்பதை மட்டுமே அறிந்தவர்கள். நெல் அறுவடை செய்தபின் வைக்கோலை வயலில் எரித்து விடுவார்கள். இங்கிருந்து சென்ற வல்லுனர்கள், தமிழர்களின் வழக்கமான பசுந்தாள் பயிரிட்டு மடித்துவிடும் முறையையும், நாற்றங்கால்விதைத்து, பிறகு நாற்றைப் பிடுங்கி வயல் நடும் முறையையும் அறிமுகப்படுத்தினர். இந்த முறை சாகுபடியில் ஏக்கருக்கு 2டன் விளைந்த நிலங்களில், ஏக்கருக்கு 4 டன் விளைந்தது. தாய்லாந்து விவசாயிகள் இப்படி நெல் சாகுபடி செய்யும் முறைக்கு""மதராஸ் முறை சாகுபடி என்று பெயரிட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது வேறு. 1960களில் தமிழக வேளாண்மையில் பசுமைப் புரட்சி திணிக்கப்பட்டது. அமெரிக்கநாடாளுமன்றத்தில் பசுமைப் புரட்சியைப் பற்றி 1960களில் விவாதம் நடந்தது. சார்லஸ் எஸ். டென்னிசன் என்பவர்,""வியட்நாமின் போரினால் முடங்கிப் போன அமெரிக்க பொருளாதாரம், பசுமைப் புரட்சியினால் மீண்டும் உயிர் பெறும்.இரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். ஆசியாவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதால், ஆசியமக்கள் கம்யூனிச பாதைக்குச் செல்வதை தடுக்க முடியும். எனவே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பசுமைப் புரட்சித்திட்டத்திற்கு மிக முக்கிய இடம் அளிக்க வேண்டும் என்று பேசினார். மிகத் தெளிவாக யாருக்காக பசுமைப் புரட்சி என்பதுபுரிகிறதா? நமது வேளாண் மக்களுக்கு, இரசாயன உரம், உயர் விளைச்சல் இரக விதைகள் ஆகியவற்றின் மூலம் தற்போதைய உணவுஉற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று பசுமைப் புரட்சியாளர்கள் உறுதியளித்தனர். உண்மையில் ""உயர் விளைச்சல் இரகவிதைகள் என்று ஏமாற்றுப் பெயர் சூட்டப்பட்ட விதைகள் எப்போதும் எங்கும் அதிக விளைச்சல் தருபவை அல்ல. தட்பவெட்பசூழல் மற்றும் தேவையான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் தரப்பட்டால் தான் விளைச்சல் அதிகரிக்கும். அதே நேரத்தில்இந்த இரகப் பயிர்கள் பூச்சி தாக்குதலுக்கு எளிதில் இலக்காகுபவை.
|
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்















Click it and Unblock the Notifications